அரசியல்

இவ்ளோ நாள் காணோம்? தொகுதி மக்களால் அடித்துவிரட்டப்பட்ட பாஜக முன்னாள் அமைச்சர்.. பெங்களூருவில் பரபரப்பு !

தனது தொகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற பாஜக முன்னாள் அமைச்சரை தொகுதி மக்கள் விரட்டி அடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்ளோ நாள் காணோம்? தொகுதி மக்களால் அடித்துவிரட்டப்பட்ட பாஜக முன்னாள் அமைச்சர்.. பெங்களூருவில் பரபரப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடக மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.

மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பாஜக சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். அதிலும் சில நாட்களில் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகளில் ஆளும் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

இவ்ளோ நாள் காணோம்? தொகுதி மக்களால் அடித்துவிரட்டப்பட்ட பாஜக முன்னாள் அமைச்சர்.. பெங்களூருவில் பரபரப்பு !

இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தோடு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், பாஜகவின் முக்கிய தலைவர்கள் சர்ச்சையில் சிக்கிக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இது தவிர முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கொடுக்காத நிலையில் அவர்கள் அங்கிருந்து விலகுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முக்கிய தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் பாஜகவிலிருந்து விலகியுள்ள நிலையில் தற்போது அது பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை அளித்து வருகிறது.

கர்நாடகாவில் இன்றோடு பிரசாரம் ஓயவுள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையே தனது தொகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற பாஜக முன்னாள் அமைச்சரை தொகுதி மக்கள் விரட்டி அடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் பெங்களூர் ராஜாஜி நகர் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருப்பவர் சுரேஷ் குமார். இவர் முன்னாள் கல்வித்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் தனது தொகுதிக்கு உட்பட்ட இடங்களுக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது பொதுமக்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவில்லை, தண்ணீர் பிரச்னையை தீர்க்கவில்லை, சாலைகளை சரியாக போடவில்லை என்பது போன்ற புகார்களை கூறியுள்ளனர்.

மேலும், தொகுதி பக்கமே இத்தனை நாள் வரவில்லை. இப்போது தேர்தல் என்றவுடன் வருகிறீர்களா எனக் கூறி அவரை அங்கிருந்து விரட்டியுள்ளனர். அதைத் தொடர்ந்து பாஜக முன்னாள் அமைச்சர் சுரேஷ் குமார் உடனடியாக அங்கிருந்து கிளம்பியுள்ளார். முன்னாள் அமைச்சர் மக்களால் விரட்டப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories