அரசியல்

இந்த மீச வச்ச.. இனிமேல் இப்படி பேசுனா எப்படி அடி விழும் என காட்டிய ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் !

எடப்பாடி பழனிசாமியின் வேட்பாளர் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், அவரின் மீசை, ஆண்மை குறித்த அருவருக்கத்தக்க பேச்சுக்கு பொதுமக்கள் கொடுத்த பதிலடியாக அதிமுகவின் இந்த தேர்தல் தோல்வி அமைந்துள்ளது.

இந்த மீச வச்ச.. இனிமேல் இப்படி பேசுனா எப்படி அடி விழும் என காட்டிய ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நடைபெற்றது. இதற்காக, 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 1,430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 விவிபேட் கருவிகள், 286 கட்டுப்பாட்டுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

286 முதன்மை அலுவலர்கள், 858 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் 62 அலுவலர்கள் என மொத்தம் 1,206 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இடைத்தேர்தலில் 82 ஆயிரத்து 138 ஆண்கள், 88 ஆயிரத்து 37 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர்.

இந்த மீச வச்ச.. இனிமேல் இப்படி பேசுனா எப்படி அடி விழும் என காட்டிய ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் !

இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் படி 1,10,039 வாக்குகள் பெற்று தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 43,642 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்துள்ளார். அதேபோன்று நாம்தமிழகர் கட்சி 7984 வாக்குகளும், தே.மு.தி.க 949 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளன. மேலும் காங்கிரஸ், அ.தி.மு.கவைத் தவிர மற்ற 75 வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர்.

இந்த மீச வச்ச.. இனிமேல் இப்படி பேசுனா எப்படி அடி விழும் என காட்டிய ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் !

இதன் மூலம் தேர்தலுக்கு முன்னர் திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் விமர்சித்தவர்களுக்கு பொதுமக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். திமுக மீது பல்வேறு விமர்சனங்களை வைத்தாலும் பொதுமக்கள் திமுகவையும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினையும்தான் முழுவதும் நம்புகிறார்கள் என்பதும் இந்த தேர்தல் வெற்றி மூலம் உறுதியாகியுள்ளது.

முன்னதாக அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஈரோட்டில் பிரச்சாரம் செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி "நீ சரியான ஆம்பளையா இருந்தா.. மீசை வச்ச ஆம்பளையா இருந்தா.. வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தா" என்ற ரீதியில் அவரின் பேச்சுக்கு சம்மந்தம் இல்லாமல் கொச்சையாக பேசியிருந்தார். அவரின் இந்த அருவருக்கத்தக்க பேச்சுக்கு கனிமொழி MP, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திரைப்பட இயக்குமார் நவீன் உள்ளிட்டோர் தக்க பதிலடி கொடுத்திருந்தனர்.

இந்த மீச வச்ச.. இனிமேல் இப்படி பேசுனா எப்படி அடி விழும் என காட்டிய ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் !

இந்த நிலையில், இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் வேட்பாளர் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், அவரின் அருவருக்கத்தக்க பேச்சுக்கு பொதுமக்கள் கொடுத்த பதிலடியாக அதிமுகவின் இந்த தேர்தல் தோல்வி அமைந்துள்ளது. இதன் மூலம் மீசை, ஆண்மை, பெண்மை என பேசினால் பொதுமக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பதும் தேர்தல் மூலம் வெளிப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories