அரசியல்

3-ம் இடத்திலிருந்து 22-வது இடத்துக்கு சரிவு.. அமெரிக்க பங்குச்சந்தையில் தடை..மீள முடியாமல் திணறும் அதானி?

நியூயார்க் பங்குசந்தையான Dow Jones அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் நிறுவனத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.

3-ம் இடத்திலிருந்து 22-வது இடத்துக்கு சரிவு.. அமெரிக்க பங்குச்சந்தையில் தடை..மீள முடியாமல் திணறும் அதானி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டு கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டது. இந்த சரிவிலிருந்து இன்னும் மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் லட்சம் பேர் வேலை இழந்து வீதிக்கு வந்துள்ளனர்.ஆனால் அதானி குழும நிறுவனத்தின் வருவாய் மட்டும் கணிசமாக உயர்ந்தது. இது எப்படி என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.அதானி குழும நிறுவனங்களின் செயல்பாடுகளை ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் இரண்டு ஆண்டாக ஆய்வு செய்து இந்த குற்றச்சாட்டை நாங்கள் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது. அதோடு பங்குச்சந்தையிலும் முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலமே தம் நிறுவனப் பங்குகள் விலை அதானி குழுமம் அதிகரித்துள்ளது என்றும் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

3-ம் இடத்திலிருந்து 22-வது இடத்துக்கு சரிவு.. அமெரிக்க பங்குச்சந்தையில் தடை..மீள முடியாமல் திணறும் அதானி?

அதேபோல் கரீபியன் நாடுகள், மோரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் போலி நிறுவனங்களை அதானி நடத்தி வருகிறார். அரசாங்கம் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் உதவியுடனே அந்த மோசடிகள் நடந்துள்ளது என பகிரங்கமாகவே ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 நிறுவனங்களில் பங்குகள் மூன்று ஆண்டுகளில் 819% உயர்ந்துள்ளது. இந்த நிறுவனங்கள் அதிகமான கடனை பெற்றுள்ளன. இந்த 7 நிறுவனங்களில் 5 நிறுவனங்களில் விகிதங்கள் 1%க்கும் கீழே உள்ளது. இதனால் பணப்புழக்க அழுத்தத்தைச் சந்தித்துள்ளது.

அதானி குழுமம் பணமோசடி, வரி செலுத்துவோர் நிதி திருட்டு, பங்குச்சந்தை மோசடி என 17 பில்லியன் டாலர்கள் வரை மோடி செய்துள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவை சந்தித்தன. இதன் காரணமாக அதானி நிறுவனத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதானி உலக பணக்காரர் வரிசையில் 3-வது இடத்தில் இருந்து 22-வது இடத்துக்கு சரிந்துள்ளார். அவரது சொத்துமதிப்பு 3.9 லட்சம் கோடி சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சரிவு பல நாட்களுக்கு தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

3-ம் இடத்திலிருந்து 22-வது இடத்துக்கு சரிவு.. அமெரிக்க பங்குச்சந்தையில் தடை..மீள முடியாமல் திணறும் அதானி?

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பங்குச்சந்தையை கண்காணிக்கும் செபி அமைப்பு விசாரணையை தொடங்குவதாக அறிவித்தது. மேலும், இந்திய ரிசர்வ் வங்கியும் அதானியால் வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை காரணமாக அதானி நிறுவனங்களின் பங்கு விலைகள் குறைந்துவரும் நிலையில், அதனை கடனுக்கான பிணையாக ஏற்கமுடியாது என சுவிட்சர்லாந்தை சேர்ந்த Credit Suisse என்ற சர்வதேச முதலீட்டு வங்கி அறிவித்துள்ளது.

3-ம் இடத்திலிருந்து 22-வது இடத்துக்கு சரிவு.. அமெரிக்க பங்குச்சந்தையில் தடை..மீள முடியாமல் திணறும் அதானி?

இந்த நிலையில், அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் பங்கு மதிப்பு இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் 25 சதவீதம் வரை குறைந்தது. இதன் காரணமாக நியூயார்க் பங்குசந்தையான Dow Jones அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் நிறுவனத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.

மேலும், அமெரிக்க முதலீட்டு வங்கியான சிட்டி குழுமத்தின் சொத்துப் பிரிவும், கிரெடிட் சூசி நிறுவனமும் அதானி குழுமத்தின் கடன் பத்திரங்களை பிணையமாக ஏற்றுக்கொள்வதை நிறுத்தியுள்ளது அதானிக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இது போன்ற காரணங்களால் அதானி நிறுவனம் மீண்டெழ முடியாத நிலைக்கு செல்லும் என பொருளாதார நிபுணர்கள் கண்டித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories