அரசியல்

கழுத்துக்கு கத்தி வைக்கும்போது ஆடு என்ன செய்யும்? : அம்பலமாகும் பாஜகவும், அலறித்துடிக்கும் அண்ணாமலையும் !

பெண்களுக்கு எதிரான நடத்தையை, செயல்பாட்டை, சிந்தனையை கொண்டிருக்கும் பாஜகவை அம்பலப்படுத்தும் வாய்ப்பை இத்தருணத்தைக் கொண்டு ஊடகவியலாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கழுத்துக்கு கத்தி வைக்கும்போது ஆடு என்ன செய்யும்? : அம்பலமாகும் பாஜகவும், அலறித்துடிக்கும் அண்ணாமலையும் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை தி நகரிலுள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணாமலை பத்திரிகையாளர் கேள்விகளுக்கு பதிலளிக்கமால் அவர்களை மிரட்டும் தொணியில் பேசியுள்ளார்.

மேலும் காயத்ரி ரகுராம் முதல் ரபேல் வாட்ச் வரை பத்திரிகையாளர்கள் துளைத்து துளைத்து கேள்வி எழுப்பி வந்தனர். அவர்களுக்கு சரியான பதிலளிக்காமல் அவர்கள் அனைவரையும் மிரட்டிய அண்ணாமலை, அவர்களிடம் நீங்கள் எந்த செய்தி என்றும், உங்கள் பெயர் என்ன என்றும் மிரட்டினார். அதோடு அண்ணாமலை ஆத்திரப்பட அவருடன் இருப்பவர்களும் பத்திரிக்கையாளர்களிடம் சீறினார்கள்.

கழுத்துக்கு கத்தி வைக்கும்போது ஆடு என்ன செய்யும்? : அம்பலமாகும் பாஜகவும், அலறித்துடிக்கும் அண்ணாமலையும் !

மேலும் அண்ணாமலை பத்திரிகையாளரது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தொடர்ந்து அவமானப்படுத்தியும் வந்தார். சில யூடியூப் சேனல்கள் சார்பாக அவரிடம் கேள்விகேட்டபோது, "கேள்வி கேட்க நீங்கள் யார்? அப்படி ஒரு யூடியூப் சேனல் இருக்கிறதா? வெறும் 40 ஆயிரம் ரூபாய் கேமரா, மொபைல் போன் வைத்துக்கொண்டு லைக் வாங்குவதற்காக பேட்டியெடுக்க வந்துவிடுவதா?" என்று டிஜிட்டல் மீடியாவை அவமானப்படுத்தியுள்ளார்.

அதோடு கேள்வி கேட்பது யாராக இருந்தாலும் அவர்கள் பெயர், சேனல் பெயரையும் கூறிவிட்டு கேளுங்கள் என்று திமிரோடு கூறிய அண்ணாமலை, தொடர்ந்து கேள்வி எழுப்பிய இரு சேனல்கள் அவர்கள் கேள்விகளுக்கு ரூமில் வைத்து பஞ்சாயத்து செய்கிறேன் என்று கூறினார். இதனால் அங்கு பெறும் பரபரப்பு ஏற்பட்டது.

கழுத்துக்கு கத்தி வைக்கும்போது ஆடு என்ன செய்யும்? : அம்பலமாகும் பாஜகவும், அலறித்துடிக்கும் அண்ணாமலையும் !

முன்னதாக பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம், பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றபிறகே வீடியோ கலாச்சாரம் வந்ததாகவும், அவர் வந்த பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குற்றசாட்டை முன்வைத்தார். மேலும் டெல்லியில் தன்னை அவமான படுத்தும் வீடியோவும் தன்னிடம் இருப்பதாக அவர் கூறினார்.

இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், "பாஜகவில் இருந்து வெளியேறியவர்கள் பற்றி பேச விரும்பவில்லை. பாஜகவில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம் எங்கே சென்றாலும் நன்றாக இருக்க வாழ்த்துகிறேன். கட்சியில் இருந்து செல்வோர், புகழ்ந்துவிட்டு தான் வெளியேற வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. என் மீதான விமர்சனங்களை வரவேற்கிறேன். ஆனால் அவதூறு சொல்வதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது" என்று கேள்விக்குப் பதில் சொல்லாமல் மழுப்பினார்.

தொடர்ந்து காயத்ரி ரகுராம் குற்றசாட்டு குறித்த ஆதாரங்களை வெளியிடுங்கள் என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்கையில், அதற்கு நீங்கள் யார், என்ன சேனல், நான் ஒன்றும் உங்கள் காலில் விழவில்லை. என்னை Bycott செய்ய வேண்டுமென்றால் செய்யுங்கள் என்று முழுவதுமாக அசிங்கப்படுத்தி பேசினார்.

மேலும் உங்களுக்கு ஆதாரங்கள் தானே தேவை, சந்திப்பு முடிந்ததும் உள்ளே வாருங்கள் அங்கே வைத்துக்கொள்ளலாம் பஞ்சாயத்தை என்று, ரஜினிகாந்தின் 'சிவாஜி' படத்தில் இடம்பெறும் காட்சி போல் மிரட்டி பேசினார்.

அதோடு அண்ணாமலை அருகிலிருந்தவர்கள் 'தலையே சும்மா இருக்கு.. வால் ஏன் துள்ளுது..?' என்பது போல் எகிறி வந்தார்கள். விட்டால் பத்திரிகையாளர்களை அடித்தே இருப்பார்கள். அந்த அளவு துள்ளினார்கள். தொடர்ந்து நீங்கள் எல்லாம் பத்திரிகையளர்களா என்று அசிங்கப்படுத்தி கேட்டார். தொடர்ந்து எந்தவொரு கேள்விகளுக்கும் முறையாக பதிலளிக்காமல் வெறும் மழுப்பலாக எகிறினார்.

கழுத்துக்கு கத்தி வைக்கும்போது ஆடு என்ன செய்யும்? : அம்பலமாகும் பாஜகவும், அலறித்துடிக்கும் அண்ணாமலையும் !

அண்ணாமலையின் இந்த இழிவான செயல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் இந்த கேவலமான செயலுக்கு வலுத்த கண்டனங்களை எழுப்பினர்.

அதோடு அண்ணாமலையின் பேச்சு பொதுமக்களிடையேயும் முகசுழிப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த நிகழ்வு குறித்து இணையவாசிகள் பொதுமக்கள் பல்வேறு விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் அண்ணாமலைக்கு மக்களை பற்றி பேசவே தகுதி கிடையாது. அதிலும் பத்திரிகையாளர்களை பற்றி பேச அவருக்கு நிச்சயமாக தகுதி கிடையாது.

நேற்று அண்ணாமலை நடந்துகொண்ட விதத்திலே தெரியவந்துள்ளது அண்ணாமலை குறித்து காயத்ரி ரகுராம் வைத்த குற்றசாட்டுகள் அனைத்தும் உண்மை என்று. அவர் முறையாக பதிலளிக்காமல், கேள்வி எழுப்பிய போதெல்லாம், அதனை திசை திருப்பியுள்ளார்.

அது சரி.. ஒரு பத்திரிகையாளர் கேள்விக்கு அஞ்சும் வீரரை (மோடி) தலைவராக கொண்டிருக்கும் கட்சியின் மாநிலத் தலைவரிடம் வேறென்ன எதிர்பார்த்துவிட முடியும்?. அதிலும் அந்த சந்திப்பில் அண்ணாமலை, "நான் பயப்பட மாட்டேன்" என்பதை திரும்பத் திரும்பச் சொல்லி பயத்தைதான் வெளிப்படுத்தியுள்ளார்.

கழுத்துக்கு கத்தி வைக்கும்போது ஆடு என்ன செய்யும்? : அம்பலமாகும் பாஜகவும், அலறித்துடிக்கும் அண்ணாமலையும் !

பெண்களுக்கு எதிரான நடத்தையை, செயல்பாட்டை, சிந்தனையை கொண்டிருக்கும் பாஜகவை அம்பலப்படுத்தும் வாய்ப்பை இத்தருணத்தைக் கொண்டு ஊடகவியலாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எல்லா கேமராக்களுடன் சென்று அண்ணாமலையை சந்திப்பதற்கு பதில் காயத்ரி ரகுராமை சந்தித்தால் பல உண்மைகள் வெளிவரும். இன்னும் கொஞ்சம் கர்நாடகா சென்று அங்கிருந்து தோண்டி வந்தால் அண்ணாமலையை புதைக்க ஆழமான குழி கிடைக்கும். மக்களும் தெளிவாவர். மற்றபடி 'கழுத்துக்கு குறி வைத்து கத்தி இறக்கப்படுகையில் ஆடு அலறுவது இயல்பு தான்.!'

முன்னதாக காயத்ரி ரகுராம் குறித்த கேள்விக்கு, "எங்கிருந்தாலும் வாழ்க.!" என்பது போல் மழுப்பலாக பதில் கூறிய அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் வாயிலாக பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், "அண்ணாமலை எனக்கு உங்கள் வாழ்த்துகள் தேவையில்லை. என்னைப்பற்றி அவதூறு பரப்பியதற்கு உங்கள் மன்னிப்பு மட்டுமே எனக்குத் தேவை. அவர் எந்த அளவு கிரிமினலாக செய்லபடுவார் என்பது எனக்கு தெரியும். நான் பாதிக்கப்பட்ட பெண். இறுதி வரை போராடுவேன்" என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories