அரசியல்

"மோடியின் அரைகுறை குறள் எல்லாம் நமக்கு தந்த லாலிபாப்" - ஒன்றிய அரசின் இந்தி திணிப்புக்கு சு.வெ கண்டனம் !

கல்வி நிலையங்களில், ஒன்றிய அரசின் பணிகளில்,போட்டி தேர்வுகளில் இந்தி கட்டாயம் என்ற அமித்ஷா குழுவின் அறிக்கைக்கு சு.வெங்கிடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

"மோடியின் அரைகுறை குறள் எல்லாம் நமக்கு தந்த லாலிபாப்" - ஒன்றிய அரசின் இந்தி திணிப்புக்கு சு.வெ கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் மொழிச் சட்ட குழுவின் 11 வது தொகுப்பின் பரிந்துரையில் இந்தி திணிப்பு கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.

இது தவிர ஒன்றிய அரசின் அலுவலங்களில் இந்தியை பயன்படுத்த சொல்வது, அலுவல் பூர்வ கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

நாடாளுமன்றத்தில் பிற மாநில அமைச்சர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலம் தெரிந்த அமைச்சர்கள் கூட இந்தியில் பதில் சொல்வதும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கல்வியில் இந்தி, ரயில்வே துறையில் இந்தி என எங்கும் இந்தி, எதிலும் இந்தி என்ற கொள்கையை ஒன்றிய அரசு பின்பற்றுவது பிற மாநில மக்கள் இடையே மொழி ரீதியான அச்சத்தை ஏற்படுத்துகிறது.

"மோடியின் அரைகுறை குறள் எல்லாம் நமக்கு தந்த லாலிபாப்" - ஒன்றிய அரசின் இந்தி திணிப்புக்கு சு.வெ கண்டனம் !

இரு தினங்களுக்கு முன்னர் பணியாளர் தேர்வாணையத்தால், ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. இதற்கு திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக ஹிந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

மேலும், கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக கட்டாயம் இந்தி இடம்பெறவேண்டும்.கல்லூரிகளில் ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை கொண்டு வர வேண்டும்.போட்டி தேர்வுகளில் கட்டாய ஆங்கில மொழி வினாத்தாள்கள் நிறுத்தப்பட வேண்டும். போட்டி தேர்வுகளில் இந்தியை கட்டாய மொழியாக்க வேண்டும்.இந்தியில் பணிபுரியாத அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்.ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வில் தேர்வாளர்கள் இந்தி அறிவை உறுதி செய்ய வேண்டும்." போன்ற பல்வேறு பரிந்துரைகளும் அதில் இடம்பெற்றுள்ளது. ஒன்றிய அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

ஒன்றிய அரசின் இந்த இந்தி திணிப்புக்கு மதுரை நாடாளுமனர் உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ள அவர், " இந்தி திணிப்பு:அடுத்தகட்ட தாக்குதலுக்கு தயாராகிவிட்டது ஒன்றிய அரசு.ஒன்றிய கல்வி நிறுவனங்கள் - கேந்திரிய, நவோதயா வித்யாலயாக்கள், ஐ ஐ டி, ஐ.ஐ.எம், எய்ம்ஸ் வரை, ஒன்றிய அரசு பணி நியமனத் தேர்வுகள், ஐ. நா பயன்பாடு எல்லாவற்றிலும் இனி இந்தி வழிதான். அலுவல் மொழி சட்டம், பிரிவு 1 இன் கீழான மாநிலங்களின் நீதிமன்றங்களில் இந்திஅலுவல் பயிற்சிகளில், அலுவல் நிகழ்ச்சி நிரல்களில், தூதரகங்களின் தகவல் தொடர்பில் எங்கும் எல்லாம் இந்தி.

அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் மொழிச் சட்ட குழுவின் 11 வது தொகுப்பில் பரிந்துரை.

“வணக்கோம்”, அரைகுறை உச்சரிப்பில் குறள் எல்லாம் நமக்கு தந்த லாலிபாப். மொழி உரிமை, மொழி பன்மைத்துவம் மீதோ கடும் தாக்குதல். எட்டாம் அட்டவணையின் அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் என்ற கோரிக்கை காற்றில்...அனுமதிக்காது தமிழகம்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories