அரசியல்

“சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்” : உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதல்வர் கொடுத்த வார்னிங் என்ன ?

நியாயத்தின் படி நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நான் எச்சரிக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

“சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்” : உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதல்வர் கொடுத்த வார்னிங் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நாமக்கல், தேசிய நெடுஞ்சாலை, பொம்மகுட்டையில் ‘நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டில் மாவட்ட செயலாளர்கள், மாநில அமைச்சர்கள், தி.மு.க நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், நகர்ப்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மேலும் மாநாட்டைத் துவங்கி வைத்து பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை உரையாற்றினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மக்களிடம் நல்ல பேர் வாங்குவது தான் அனைத்திலும் கஷ்டமானது. ஐம்பது ஆண்டுகளாக மக்களைச் சந்தித்து வருகிறேன். மக்கள் மனதில் இருப்பது என்ன என்பதை அவர்களது முகத்தை பார்த்தாலே தெரிந்துவிடும். கூட்டமாக நின்றாலும் எந்த ரியாக்‌ஷனும் இல்லாமலும் இருப்பார்கள் மக்கள். நம்மை நோக்கி மலர்ச்சியுடன், மகிழ்ச்சியுடன் வந்தால் தான் அது பாசிட்டிவ் ஆன மனோபாவம் ஆகும்.

“சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்” : உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதல்வர் கொடுத்த வார்னிங் என்ன ?

இத்தகைய மனோபாவத்தை மக்களிடம் இருந்து நீங்கள் பெற வேண்டும். மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு உதவிகள் செய்தால் நிச்சயம் உங்களை நோக்கி மக்கள் வரத்தான் செய்வார்கள். அதே நேரத்தில் நீங்கள் தவறு செய்தால் உங்களை விட்டு மக்கள் விலகுவார்கள். உங்களைப் புறக்கணிப்பார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

மாநகராட்சி மேயர் முதல் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் வரை அனைவரும் எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் நடந்து கொள்ள வேண்டும். இந்த மாநாட்டின் அடிப்படையான நோக்கமே இதுதான். சட்டப்படி - விதிமுறைப்படி - நியாயத்தின் படி - மக்களுக்காக நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நான் எச்சரிக்கிறேன். கட்சி ரீதியான நடவடிக்கை மட்டுமல்ல - சட்டரீதியான நடவடிக்கையே எடுக்கப்படும்.

நான் அதிகப்படியான ஜனநாயகவாதியாக ஆகிவிட்டேன் என்று எனக்கு நெருக்கமான சில நண்பர்கள் சொல்கிறார்கள். அனைவர் கருத்தையும் கேட்டு - அவர் கருத்துக்கும் மதிப்பளித்துச் செயல்படுவதுதான் ஜனநாயகமே தவிர - யாரும் எதையும் செய்யலாம் என்பது ஜனநாயகமல்ல. அப்படி நான் மாறிவிடவுமில்லை.

“சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்” : உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதல்வர் கொடுத்த வார்னிங் என்ன ?

ஒழுங்கீனமும் - முறைகேடும் தலைதூக்குமானால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்பதை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மட்டுமல்ல அனைவர்க்கும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சிக்கு சும்மா வந்துவிடவில்லை. தங்கத் தாம்பாளத்தில் வைத்து தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவி எனக்குத் தரப்படவில்லை. ஐம்பதாண்டு காலமாக உழைத்த உழைப்பின் பலன் இது.

கோடிக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களின் உழைப்பின் பயன் இது. என்னை நம்பி, கோடிக்கணக்கான தொண்டர்கள் இந்தக் கட்சியை என்னிடம் ஒப்படைத்துள்ளார்கள். என்னை நம்பி, கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் இந்த ஆட்சியை ஒப்படைத்திருக்கிறார்கள். இன்னும் சொன்னால் தமிழ்நாட்டின் எதிர்காலம் என்பதே திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தின் கையில் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கு களங்கம் ஏற்படுத்தும் காரியத்தை யாரும் செய்துவிடக் கூடாது. யாரோ ஒருசிலரின் தவறான செய்கையின் காரணமாக, தமிழ்நாட்டின் முதலமைச்சரான நானும் - கோடிக்கணக்கான தொண்டர்களும் அவமானத்தால் தலைகுனியும் நிலையை யாரும் உருவாக்கிவிடக் கூடாது என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

“சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்” : உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதல்வர் கொடுத்த வார்னிங் என்ன ?

பேரறிஞர் அண்ணாவின் தம்பிகள் - முத்தமிழறிஞர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனது சகோதர சகோதரிகள் - என்பதை ஒவ்வொரு நாளும் உணர்ந்து செயல்படுங்கள். ஒற்றுமை இல்லாத இடத்தில் அனைத்துப் பணிகளும் முடங்கிப் போகும்.

மேயரும் துணை மேயரும் பேசமாட்டார்கள் - நகராட்சித் தலைவருக்கும் - கவுன்சிலர்க்கும் ஆகாது - பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு உள்ளேயே பஞ்சாயத்து தான் - என்பது போன்ற செய்திகள் எனக்கு வரக்கூடாது. ஒற்றுமையாக இருங்கள்.

ஊருக்காக உழையுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். சமூகநீதி - சுயமரியாதை - பகுத்தறிவு - சமத்துவம் - சகோதரத்துவம் -பெண் விடுதலை - மொழிப்பற்று - இன உரிமைகள் - மாநில சுயாட்சி - கூட்டாட்சி கொண்ட இந்தியா ஆகிய அடிப்படைத் தத்துவங்களைக் கொண்டது தான் திராவிட இயக்கம்.

அந்த தத்துவங்களைக் கொண்ட திராவிட மாடல் அரசு தான் இன்று நீங்கள் காணும் திராவிட முன்னேற்றக் கழக அரசாகும். இத்தகைய கோட்பாடுகளை நீங்கள் முழுமையாகத் தெரிந்தும், அறிந்தும், புரிந்தும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகத் தான் காலையில் இத்தகைய கருத்துரைகள் வழங்கப்பட்டன.

நகராட்சித் தலைவருக்கு - பேரூராட்சித் தலைவருக்கு - வார்டு கவுன்சிலருக்கு - இவை எல்லாம் எதற்கு என்று நீங்கள் யாரும் கருதமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் இந்தப் பொறுப்புகளுக்கு வந்திருக்கிறீர்கள் என்பதற்காக அல்ல- திராவிட முன்னேற்றக் கழகத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கொள்கை கோட்பாடுகளை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். அறிந்தவர்களாக மட்டுமல்ல, அதனைச் செயல்படுத்துபவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்.

“சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்” : உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதல்வர் கொடுத்த வார்னிங் என்ன ?

சாலைகள் போடுவதும் - பாலங்கள் கட்டுவதும் - தண்ணீர் தொட்டி கட்டுவதும் - கழிவு நீர் கால்வாய்கள் அமைப்பதுமான - பணிகளோடு உங்களது பணிகள் முடிந்துவிடவில்லை. சமத்துவப் பாதைகள் அமைப்பதும் உங்களது கடமை. சகோதரத்துவப் பாலங்கள் அமைப்பதும் உங்களது கடமை. சமூகத்தின் கழிவுகளைத் துடைக்க வேண்டியதும் உங்கள் கடமைகள் தான். அதனால் தான் இதனை திராவிட மாடல் ஆட்சி என்கிறோம்.

அனைவருக்குமான வளர்ச்சி - அனைத்துத் துறை வளர்ச்சி - அனைத்து மாவட்டத்து வளர்ச்சி - என்ற வரிசையில் அனைத்து சமூகங்களின் வளர்ச்சி என்று நான் சொல்லி வருவது இதுதான்.

அனைத்துச் சமூகங்களையும் வளர்க்காமல் அனைவருக்குமான வளர்ச்சியை நீங்கள் உருவாக்கி விட முடியாது. அனைத்து சமூகங்களையும் வளர்க்காமல் - வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று நீங்கள் பேச முடியாது. அனைத்து சமூகங்களையும் வளர்க்காமல் - கீழடியில் 3200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் வாழ்ந்தான் என்று பேச பெருமை கொள்ள முடியாது.

பெரியாரின் பிறந்த தினம் அன்று சமூகநீதி உறுதிமொழியையும்- அம்பேத்கர் பிறந்த தினம் அன்று சமத்துவ நாள் உறுதிமொழியையும் எடுத்துக் கொள்ளும் தகுதியை நாம் பெற்றாக வேண்டும். பெரியாரின் பிறந்த தினம் அன்று சமூகநீதி உறுதிமொழியையும்- அம்பேத்கர் பிறந்த தினம் அன்று சமத்துவ நாள் உறுதிமொழியையும் எடுத்துக் கொள்ளும் தகுதியை நாம் பெற்றாக வேண்டும். எது திராவிட மாடல் என்று கேட்பவர்களுக்கு இதுதான் என்னுடைய பதில்.

பதவியோ, பட்டமோ, பொறுப்போ, மாலையோ, பாராட்டோ எல்லாமே கொள்கையை நடைமுறைப்படுத்தும் பாதையில் வந்து போகிறவை தான். நிரந்தரமானது கொள்கையும், கோட்பாடும். மிகப் பெரிய பணக்காரர் பெரியார். அவர் அந்தப் பணத்தை வைத்து தொழில் நடத்தி இருந்தால் இன்று தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி வைத்து விட்டுப் போயிருக்க முடியும்!

மாபெரும் மேதை அண்ணா. பேராசிரியர்களுக்கு எல்லாம் பாடம் நடத்தும் திறமை படைத்த பேராசிரியர். இந்த நாட்டின் மாபெரும் கல்வி மேதையாக அவர் வலம் வந்திருக்க முடியும். 'தம்பி கலைஞர் கருணாநிதி திரைத்துறையில் இருந்தால், அவர் தான் நம்பர் ஒன். அவர் சம்பாத்தியம் வேறு யாருக்கும் கிடைத்திருக்காது' என்று பேரறிஞர் அண்ணா அவர்களே சொன்னார்கள். அந்தளவுக்கு புகழ் கொடி நாட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

இவர்கள் தங்களை மறந்து - இந்த தமிழ்ச் சமுதாயத்தை நினைத்து அவர்களுக்காக உழைத்தார்கள். இந்தக் கழகம் உருவாக்க நினைப்பது தலைநிமிர்ந்த தமிழகம் ஆகும். உன்னதமான தமிழகம் ஆகும். அனைத்திலும் மேம்பட்ட தமிழகம் ஆகும். அத்தகைய தமிழகத்தை உருவாக்குவதற்கு என்னை ஒப்படைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் உங்களை ஒப்படைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories