அரசியல்

”ஆராய்ந்துதான் பேசனும்; ஆதாரமில்லாமல் பேசக்கூடாது” - பாஜக அண்ணாமலைக்கு அமைச்சர் மனோதங்கராஜ் பதிலடி!

கடந்த 10 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்துறை முறையாக செயல்படுத்தப்படவில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

”ஆராய்ந்துதான் பேசனும்; ஆதாரமில்லாமல் பேசக்கூடாது” - பாஜக அண்ணாமலைக்கு அமைச்சர் மனோதங்கராஜ் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தவறான கருத்தை கூறுகிறார். எதுவாக இருந்தாலும் ஆராய்ந்து பேச வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் "நுண்ணரங்கு '21" எனும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு மாநாட்டினை, அத்துறையின் அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இ-சேவை மையங்களில் ஆதார் மூலம் சேவை கட்டணம் செலுத்தும் முறையினை தொடங்கி வைத்து மேடையில் பேசிய அவர், மாநிலம் முழுவதும் 10,000த்திற்கும் மேற்பட்ட இ-சேவை மையங்களில் 130க்கும் அதிகமான சேவைகளை வழங்கும் வகையில், மக்கள் சேவை தொடர்பான பண பரிவர்த்தனைகளை ஆதார் மூலம் செலுத்தும் வகையில் இந்த சேவை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தொழில்நுட்பவியல் துறையில் செயற்கை நுண்ணறிவு பெறும் பங்கு வகித்து வரும் நிலையில் இதன் மூலம் மக்களுக்கான சேவைகளை வழங்குதல் மின் ஆளுமை எவ்வாறு செயல்படுத்துவது என்பது தொடர்பான துறை வல்லுனர்கள் ஆய்வாளர்களுடனான கருத்தரங்கு நடைபெறுகிறது.

வருங்காலங்களில் இத்துறைக்கு தேவையான முன்னெடுப்புகளை விரைந்து செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தமிழகத்தை நவீனமயமாக்கும் முனைப்பில் முதல்வர் தொழில்துறை உடன் இணைந்து பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார். கூடிய விரைவில் அனைத்து சேவைகளும் நவீனமயமாக்கப்படும். முதல்வர் அவர்கள் அறிவித்த டிஜிட்டல் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் அனைத்து துறைகளும் கணினி மயமாகும். இது வெகுவிரைவில் நடைபெறும் என்றார்.

தொடர்ந்து பேசியவர், கடந்த 10ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பவியல் துறை முறையாக செயல்படுத்தப்படுத்தப்படவில்லை. இ-சேவை மூலமாக பல்வேறு திட்டங்கள் வழங்கப்படுகிறது. சில திட்டங்களில் உள்ள சவால்கள் சரிசெய்யப்படும்.

இந்த 6 மாத காலத்தில் எல்காட் (ELCOT) நிறுவனத்தில் வியூகம் அமைத்து பணிகள் நடைபெறுகிறது. தேவையில்லாமல் ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை அண்ணாமலை கூறுகிறார். எதுவாக இருந்தாலும் ஆராய்ந்து பேச வேண்டும் என்றார். வெளிப்படைத்தன்மையான நிர்வாகம் என்பதை முதல்வர் குறிப்பிடுகிறார். அது கணினிமயமாதல் மூலம் விரைவில் சாத்தியமாகும் என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories