அரசியல்

வரட்டுக் கவுரவம் பார்த்து நீட்டை ரத்து செய்யாவிடில் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் - BJP அரசுக்கு எச்சரிக்கை

மாணவர்களைப் பலி பீடமாக்கும் ‘நீட்’டை ரத்து செய்யாவிடின் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என்பதில் அய்யமில்லை!

வரட்டுக் கவுரவம் பார்த்து நீட்டை ரத்து செய்யாவிடில் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் - BJP அரசுக்கு எச்சரிக்கை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மருத்துவப் படிப்பைப்பற்றி குடியரசு துணைத் தலைவரின் கருத்துகள் இன்றைய சூழலில் மிகமுக்கியமானவை. நீட் என்றால், வணிகக் கொள்ளை - ஊழல் அதிகம்; மாணவர்களைப் பலி பீடமாக்கும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யாவிடின் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என்பதில் அய்யமில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா (நாயுடு) அவர்கள் விஜயவாடாவிலுள்ள மருத்துவக் கல்லூரியில் புதிய பிரிவுகள் மற்றும் அதிநவீன சாதனங்களை திங்கள் கிழமை (1.11.2021) தொடங்கி வைத்துப் பேசியபோது குறிப்பிட்டுள்ள சில கருத்துகள் இன்றைய சூழலில் மிகவும் முக்கியமானவை ஆகும்.

குடியரசு துணைத் தலைவரின் கருத்துகள்

1. மருத்துவத் தொழிலில் மனிதவளப் பற்றாக்குறைப் பிரச்சினைகளுக்கு அவசரத் தீர்வு காணப்படவேண்டும்.

2. நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட வேண்டியதன் தேவையை கரோனா பெருந்தொற்று உணர்த்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி 1000 பேருக்கு (2024-க்குள்) ஒருவர் என்ற விகிதத்தை அடையவேண்டும். அந்தத் திசையில் இந்தியா சென்று கொண்டிருக்கவேண்டும்.

3. கடந்த சில ஆண்டுகளாக மருத்துவத் தொழில் வணிகமயமாவது அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

4. கிராமப்புறங்களில், தொலை மருத்துவ சேவை வழங்குவது உள்ளிட்ட பல துறைகளில், அரசு - தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கவேண்டும்.

இவையத்தனையும் நம் நாட்டிற்கு மிக தேவை; அதிலும் கரோனா கொடுந்தொற்றுகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளும், வாழ்க்கையின் சின்னாபின்னமான சிதைவுகளும், அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களை நம் மக்களிடையே பல நிலைகளிலும் புரட்டிப் போட்ட தலைகீழ் மாறுதல்களும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், மேற்கண்ட யோசனைகளைப் பொருத்திப் பார்க்கவேண்டும்.

வரட்டுக் கவுரவம் பார்த்து நீட்டை ரத்து செய்யாவிடில் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் - BJP அரசுக்கு எச்சரிக்கை

‘நீட்’ தேர்வில் பாதிப்பு யாருக்கு?

‘நீட்’ தேர்வின் மூலம் பரவலாக கிராமப்புற, ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாநிலங்களிலிருந்து வந்து படிப்பவர்களும், படிப்பை முடித்த பிறகு சொந்த மாநிலம் சென்று விடுவர்; அல்லது அம்மாநிலங்களிலேயே பணி செய்யும்போது, மொழி தெரியாது சிகிச்சை அளிக்கும் இக்கட்டான நிலை முதலிய இடர்ப்பாடுகள் ஏற்படுவதுபற்றி பலமுறை விளக்கிவிட்டோம்.

தற்போதுள்ள ‘நீட்’ தேர்வு கார்ப்பரேட் வணிகக் கொள்ளைக்குக் தாராளமாக கதவு திறந்து விட்டுள்ளதா? இல்லையா?

நம் நாட்டு மருத்துவ சேவையின் தேவை இவ்வளவு அதிகமாக இருக்கும்போது, வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு - அதிக பணத்தை சம்பளமாகப் பெற்று, அதற்கு மருத்துவ இடங்களைத் ‘தாரை’ வார்ப்பது எவ்வகையில் நியாயம்?

முதன்முதலில் நீட் தேர்வு ஆணையம் வரைவு வெளியிட்டபோதே, அது WTO-GATS என்ற பன்னாட்டு ஒப்பந்தத்தின்படிதானே உருவாக்கப்பட்டது.

இது வணிக முறையின் வெளிப்பாடும், தொடக்கமும் இல்லையா?

அதுமட்டுமல்ல, கார்ப்பரேட் கோச்சிங் கொள்ளை ஒருபுறம் இருந்தாலும், தனியார் மருத்துவக் கல்லூரியில் சில இடங்களை அதிக கல்விக் கட்டணம் (பீஸ்) வாங்க அனுமதித்துள்ளது. முன்பு கணக்கில் வராது ‘நன்கொடை’ வாங்கியோர் - இப்போது சட்டபூர்வமாகவே கல்விக் கட்டணமாக NRI ‘சீட்’ விற்பனைமூலம் அவர்களால் பெற முடிகிறதே! ஊழலுக்கு சட்ட சம்மதத்தை மறைமுகமாக அளித்ததுபோல் அல்லவா?

‘தரம்‘ பார்த்து என்று கூறுவதே கூட ‘நீட்’ தேர்விற்கு நியாயம் கற்பிப்பதற்கு - ஏற்கக்கூடிய விதமா? இல்லை. எப்படியெனில், கார்ப்பரேட் பயிற்சி மூலம் 2, 3 மணி நேரப் பயிற்சியைவிட, அடிப்படையில் 12 ஆம் வகுப்புவரைப் படித்து, அதன்பின் மருத்துவக் கல்லூரியில் ஆழமாகப் படித்து வருவது அவர்கள் அஸ்திவாரத்தைப் பலப்படுத்துமே!

‘நீட்’ தேர்வில் குளறுபடிகளும் - ஊழல்களும்!

இன்று வெளிநாட்டிற்குச் சென்று டாக்டர்களாக பணி செய்வோர், மேலும் சிறந்த டாக்டர்களாகி மருத்துவப் புகழ் பெற்றவர்களாக இருக்கிறார்களே, அவர்கள் எல்லாம் ‘நீட்’ தேர்வு எழுதியவர்களா?

கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் ‘நீட்’ தேர்வுகளில் ஒரு ஆண்டிலாவது குளறுபடிகளும், ஊழல்களும், ஆள்மாறாட்டங்களும் இல்லாமல் நடந்தது உண்டா?

உயர்நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை கண்டனங்களுக்கும், கடும் விமர்சனங்களுக்கும் ஆளாகவில்லையா? மறுக்க முடியுமா?

மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்!

எனவே, தேவையற்ற கூடுதல் சுமையாகி, இதுவரை 18க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரைக் கொன்ற பலிபீடமான இந்த உயிர்க் கொல்லி ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய - வறட்டுக் கவுரவம் - வீண் பிடிவாதத்தைவிட்டு, சமூகநீதியைக் காப்பாற்ற, அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணான - ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிரான இந்த ‘நீட்’ தேர்வை ஒழிப்பதே சாலச் சிறந்தது!

ஒட்டுமொத்த மக்களும் கிளர்ந்து எழும் நாள் விரைந்து கொண்டிருக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories