அரசியல்

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி நிச்சயம் கவிழும் - காங்கிரஸ் மண்ணைக் கவ்வும் : மூத்த வழக்கறிஞர் ஆருடம் 

காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி அரசு நடைபெற்று வரும் கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் ஆளும் அரசு கவிழும் என மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கூறியுள்ளார்.

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி நிச்சயம் கவிழும் - காங்கிரஸ் மண்ணைக் கவ்வும் : மூத்த வழக்கறிஞர் ஆருடம் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகாவில் காங்கிரஸ் ம.ஜ.த கூட்டணி அரசை கவிழ்த்து பா.ஜ.க ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் உறுப்பினர்களிடையே குதிரை பேரம் பேசி ராஜினாமா செய்ய வைத்து உள்ளே வெளியே ஆட்டத்தை ஆடி வருகிறது.

இதனையடுத்து காங்கிரஸில் 13 பேரும், ம.ஜ.த-வில் மூவரும் ராஜினாமா செய்தனர். இவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காததால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர் 10 அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் சபாநாயகருக்கு உத்தரவிட மறுத்துள்ளது.

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி நிச்சயம் கவிழும் - காங்கிரஸ் மண்ணைக் கவ்வும் : மூத்த வழக்கறிஞர் ஆருடம் 

இதற்கிடையே, நாளை (ஜூலை 18) கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி பேசுகையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்க மாட்டார்கள் என்றும், நிச்சயம் கர்நாடகாவில் கூட்டணி அரசு கவிழும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், கொறடா உத்தரவு மூலம் அதிருப்தி எம்.எல்.ஏக்களை கட்டாயப்படுத்த முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories