அரசியல்

நிதி ஆயோக் கூட்டம்: மம்தா பானர்ஜியை தொடர்ந்து சந்திரசேகர ராவும் புறக்கணிப்பு!

டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தை மம்தா பானர்ஜியை தொடர்ந்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிதி ஆயோக் கூட்டம்:  மம்தா பானர்ஜியை தொடர்ந்து சந்திரசேகர ராவும் புறக்கணிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நிதி ஆயோக் அமைப்பின் ஐந்தாவது ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில் பலனில்லை எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானாவில் நீர்பாசன திட்டங்களை செயல்படுத்தும் பணிகள் இருப்பதால் அவர் கலந்து கொள்ள மாட்டார் என தெலங்கானா மாநில அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories