அரசியல்

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு!

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காங்கிரஸ் கமிட்டியின் நாடாளுமன்ற எம்.பிக்கள் கூட்டம் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இன்று காலை நடைபெற்றது

இதில், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவராக சோனியா காந்தியை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரைத்தார். இதனையடுத்து, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவராக சோனியா காந்தி ஒரு மனதாக தேர்வானார்

இதன் மூலம் மக்களவை மற்றும் மாநிலங்களை காங்கிரஸ் எம்.பிக்களுக்கு சோனியா காந்தி தலைவராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, ஒவ்வொரு காங்கிரஸ் உறுப்பினர்களும் நாட்டின் அரசியலமைப்பினை பாதுகாக்க போராடுவதற்க இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இதனை, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றக் குழுத் தலைவராக தேர்வாகியுள்ள சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், சோனியா காந்தியின் தலைமையின் கீழ் வலிமையான, திறமையான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் செயல்படும் என்றும், இந்திய அரசியலமைப்புக்காக போராடும் என்றும் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories