முரசொலி தலையங்கம்

ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்: “ரொம்ப ஆடாதீர்கள், அடங்குங்கள் என்பதுதான் உள்ளடக்கம்” -முரசொலி

‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல நீங்கள் என்பதை உணருங்கள்’ என்று ஆளுநர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது உச்சநீதிமன்றம். இதை விட நெத்தியடி இருக்க முடியாது.

ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்: “ரொம்ப ஆடாதீர்கள், அடங்குங்கள் என்பதுதான் உள்ளடக்கம்” -முரசொலி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல”

தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநில அரசுகளின் சார்பில் அந்தந்த மாநில ஆளுநர்களின் செயல்பாடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல நீங்கள் என்பதை உணருங்கள்’ என்று ஆளுநர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது உச்சநீதிமன்றம். இதை விட நெத்தியடி இருக்க முடியாது. 'ரொம்ப ஆடாதீர்கள், அடங்குங்கள்’ என்பதுதான் இதன் உள்ளடக்கம் ஆகும்.

பாரதிய ஜனதா கட்சி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஆளுநர்கள் மூலமாக குடைச்சல் கொடுத்து வருகிறது. எந்தத் தகுதியும் இல்லாதவர்கள் ஆளுநர்களாக வருவதால், அவர்கள் எஜமானர்களின் உத்தரவுக்கு கட்டுப்பட்டுச் செயல்படுகிறார்கள். தங்களுக்கு ஏதோ தகுதிகள் வந்து விட்டதைப் போல நினைத்து ஆட்டங்கள் போடுகிறார்கள். ஒரு மாநிலத்துக்கு ஆளுநராக வந்துவிட்டதாலேயே, அந்த மாநிலமே தங்களுக்குச் சொந்தம் என நினைத்துக் கொள்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு அரசு இருக்கிறது என்பதையே மறந்துவிட்டு, தாங்கள் ஏதோ மக்கள் தலைவர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்.

அதுவும் தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் என்பவை அத்துமீறியதாக மட்டுமல்ல, அருவெறுப்பானவையாகவும் இருக்கின்றன. மாநிலத்தின் நன்மைக்காகத் துரும்பைக் கூட நகர்த்தாத அவர், தமிழ்நாட்டுக்கான கெடுதல்களை வரிசையாகச் செய்து வருகிறார். தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் பெருமைகளைச் சிதைப்பது ஒன்றையே தனது நோக்கமாகக் கொண்டுள்ளார். எதையாவது சொல்லி, மாநிலத்தில் குழப்பம் ஏற்படுத்துவதே அவரது வேலையாக இருக்கிறது. பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் அவருக்கும் தான் இப்போது போட்டி என்று சொல்லத்தக்க வகையில் ஆளுநர் செயல்பட்டு வருகிறார். அதேநேரத்தில், மாநில நிர்வாகம் அனுப்பும் கோப்புகளை தாமதப்படுத்தியும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களுக்கு அனுமதி தராமலும் தனது அரசியல் சட்டக் கடமைகளைக் கூடச் செய்யாமல் சதி செய்கிறார்.

ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்: “ரொம்ப ஆடாதீர்கள், அடங்குங்கள் என்பதுதான் உள்ளடக்கம்” -முரசொலி

எத்தனையோ முறை - எவ்வளவோ வகை உணர்த்திய பிறகும் ஆளுநர் ரவி, உணர்வதாகத் தெரியவில்லை. திருந்துவதற்கான அறிகுறி இல்லை. இதன் இறுதிக் கட்டமாகத்தான் அவர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது தமிழ்நாடு அரசு. இதே போலத் தான் கேரளாவின் நிலைமையும், பஞ்சாப் மாநிலத்தின் நிலைமையும்.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. மாண்புமிகு பகவந்த் மான், முதலமைச்சராக இருக்கிறார். தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் தான், இப்போது பஞ்சாப் மாநிலத்தில் ஆளுநராக இருக்கிறார். பஞ்சாப் மாநில அரசு அனுப்பி வைக்கும் சட்டமுன் வடிவுகளுக்கு அனுமதி தராமல் நிறுத்தி வைத்தார் ஆளுநர் பன்வாரிலால். கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டிய மூன்று நிதி மசோதாக்களை நிறுத்தி வைத்து விட்டார் ஆளுநர். சட்டசபை கூடுவதற்கு முந்தைய நாள் - அதாவது அக்டோபர் 19 ஆம் தேதியன்று, மாநில அரசுக்கு ஆளுநர் ஒரு கடிதம் எழுதுகிறார். அந்த மசோதாக்களை ஆய்வு செய்ய வேண்டி உள்ளது என்று அதில் குறிப்பிட்டு இருந்தார் ஆளுநர்.

சட்டசபையைக் கூட்டக் கூடாது என்றும் ஆளுநர் தடை போட்டார். அதனால் சபை கூடிய சில மணிநேரங்களிலேயே ஒத்தி வைக்கப்பட்டது. இப்படி பல்வேறு குழப்பங்கள் நடக்கிறது பஞ்சாப் மாநிலத்தில். இதனைத் தடுக்கவே உச்சநீதிமன்றத்துக்கு போனது பஞ்சாப் அரசு. “சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியது பஞ்சாப் அரசு. உடனே, ஆளுநர் என்ன செய்தார் தெரியுமா? நிறுத்தி வைக்கப்பட்ட மூன்று நிதிமசோதாக்களில் இரண்டைக் கையெழுத்துப் போட்டு அனுப்பி விட்டார்.

ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்: “ரொம்ப ஆடாதீர்கள், அடங்குங்கள் என்பதுதான் உள்ளடக்கம்” -முரசொலி

இதையே உச்சநீதிமன்றம் கேள்வியாகக் கேட்டது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் மாட்டிக் கொண்டார் பஞ்சாப் ஆளுநர். “சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குமாறு ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயத்துக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டு இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. இப்பிரச்சினை உச்சநீதி மன்றத்துக்கு வந்த பிறகு தான் ஆளுநர்கள் செயல்படுகிறார்கள். இதே போலத்தான் முன்பு தெலுங்கானா ஆளுநரும் நடந்து கொண்டார். மாநில அரசு அனுப்பும் மசோதாக்களை ஆய்வு செய்யலாம். ஆனால் வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு வருவதற்கு முன்பாக ஒப்புதல் தர வேண்டும்” என்று சொன்ன நீதிபதிகள்...

“தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல என்பதை ஆளுநர்கள் மறந்துவிடக் கூடாது” என்று எச்சரிக்கையாகவும் கிண்டலாகவும் சொல்லி இருக்கிறார்கள். மாநில ஆளுநர்களுக்கு முதலில் அறிவுறுத்த வேண்டியது இதுதான். இது ஒரு நியமனப் பதவி. தங்களை அண்டி இருப்பவர்களை திருப்திப்படுத்து வதற்காகத் தரப்படும் டம்மி பதவி. ‘இது ஒரு வேஸ்ட்டான பதவி’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு முறை சொன்னார்கள். அதுதான் உண்மை. ‘நீயே அயிரை மீன், உனக்கு ஏன் விலாங்குச் சேட்டை?’ என்று ஒரு முதுமொழி உண்டு. அதனை ஆளுநர்களாக வருபவர்கள் உணர்வது இல்லை.

தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பி வைப்பட்ட 14 சட்டமுன் வடிவுகளுக்கு அனுமதி தராமல் ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறார் ஆளுநர் ரவி. இதுபோல் 8 மசோதாக்களுக்கு அனுமதி தராமல் கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான் அனுமதி தரவில்லை. வழக்கு போட்ட பிறகு பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் செயல்படத் தொடங்கி இருக்கிறார். இந்த வழக்குகள் அனைத்தும் மொத்தமாக வரும் 10 ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கின்றன. இதன்பிறகாவது தமிழ்நாடு ஆளுநர் திருந்துகிறாரா எனப் பார்ப்போம்.

- முரசொலி தலையங்கம்

09.11.2023

banner

Related Stories

Related Stories