முரசொலி தலையங்கம்

‘INDIA’ கூட்­டணியின் வலிமை மோடிக்கு தெரிகிறது.. அந்த விரக்திதான் நாடாளுமன்றத்தில் வெளிப்பட்டது -முரசொலி !

‘INDIA’ கூட்­டணியின் வலிமை மோடிக்கு தெரிகிறது.. அந்த விரக்திதான் நாடாளுமன்றத்தில் வெளிப்பட்டது -முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (14.8.2023)

பதி­லுரை அல்ல, விரக்தி உரை!

பிர­த­மர் நரேந்­திர மோடி தலை­மை­யி­லான ஆட்­சி­மீது என்ன நோக்­கத்­துக்­காக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்மானத்தை எதிர்க்கட்­சி­கள் கொண்டு வந்­தார்­களோ, அந்த நோக்­கம் நிறை­வே­றி­விட்­டது.

1. நாடா­ளு­மன்­றத்­துக்கே வராத பிர­த­மர் நரேந்­திர மோடியை நாடா­ளு­மன்­றத்­துக்­குள் வர­வைக்க வேண்­டும்.

2. நாடா­ளு­மன்­றத்­தில் பேசாத பிர­த­மரை பேச வைக்க வேண்­டும். –- இது­தான் எதிர்க்­கட்­சி­க­ளின் உண்மையான நோக்­கம். இந்த இரண்டு நோக்­க­மும் நிறை­வே­றி­விட்­டது. வரா­த­வர், வந்­தார். பேசா­த­வர், பேசினார்.

பிர­த­மரை நோக்கி எதிர்க்­கட்­சி­கள் எழுப்­பிய முக்­கி­ய­மான கேள்­வி­கள் இரண்டு.

1. பற்றி எரி­யும் மணிப்­பூ­ருக்கு ஏன் செல்­ல­வில்லை?

2. நாடா­ளு­மன்­றத்­துக்­குள் வரு­வ­தற்கு என்ன பயம்? - – இது­தான் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் எழுப்­பிய இரண்டு முக்­கி­ய­மான கேள்­வி­கள். இந்த இரண்டு கேள்­வி­க­ளுக்­கும் இறுதி வரை அவர் பதில் சொல்­லவே இல்லை. இரண்டு மணி நேரம் பேசி­னார். ஆனால் முக்­கி­ய­மான இந்த இரண்டு கேள்­விக்­கும் பதில் சொல்லவில்லை.

ஆகஸ்ட் 10 ஆம் தேதி மாலை 5.09 மணிக்கு பேசத் தொடங்­கி­னார் பிர­த­மர். 2014 ஆம் ஆண்டு தேர்­தல் மேடைகளில் காங்­கி­ரஸ் கட்­சி­மீது என்ன குற்­றச்­சாட்­டு­களை வைத்து வந்­தாரோ அதே குற்­றச்­சாட்­டு­ களை வைத்­தார். தொடர்­பில்­லாத ஏதேதோ பேசிக் கொண்டு இருந்­தார். ‘மணிப்­பூர்’ என்று குரல் எழுப்­பிக் கொண்டே இருந்­தார்­கள் எதிர்க்­கட்­சி­கள். மணிப்­பூ­ரைப் பற்றி பிர­த­மர் வாயே திறக்­க­வில்லை. ஒன்­றரை மணி நேர­மா­கப் பேசி­ய­வர் மணிப்­பூர் என்ற சொல்­லையே உச்­ச­ரிக்­க­வில்லை. 6.40 மணிக்கு எதிர்க்­கட்­சி­கள் வெளி­ந­டப்பு செய்­தார்­கள். வெளி­ந­டப்பு செய்­தது அவ­ருக்கு வச­தி­யாக ஆனது. உடனே மணிப்­பூர் பற்றி பேசத் தொடங்கினார். 7.22 மணிக்கு ஒரு வழி­யாக உரையை முடித்­துக் கொண்­டார். 2 மணி நேரம் 13 நிமி­டம் பேசிக் கொண்டு இருந்­துள்­ளார் பிர­த­மர்.

‘INDIA’ கூட்­டணியின் வலிமை மோடிக்கு தெரிகிறது.. அந்த விரக்திதான் நாடாளுமன்றத்தில் வெளிப்பட்டது -முரசொலி !

பிர­த­ம­ரின் பதி­லுரை என்­பது பதில்­கள் எது­வும் சொல்­லாத உரை. இந்த உரை, ‘பிர­த­மர்’ ஆற்­றிய உரை­யாக அமைய வில்லை. பா.ஜ.க. தலை­வர் ஆற்­றிய உரை­யாக அமைந்­தி­ருந்­தது. தேர்­தல் நேரத்­தில் காங்­கி­ரஸ் கட்சிக்கு எதி­ரா­கப் பேசும் உரை­யாக மோடி­யின் உரை அமைந்­தி­ருந்­தது. ‘எந்த மாநி­லத்­தி­லும் காங்­கி­ரஸ் இல்லை’ என்று பிர­த­மர் சொன்­னார். அப்­ப­டி­யா­னால் இரண்டு மணி நேரம் எதற்­காக காங்­கி­ரஸ் கட்­சிக்கு பதில் சொன்­னார்? இல்­லாத காங்­கி­ர­சுக்கு பதில் சொல்­வ­தற்கு எதற்­காக இரண்டு மணி நேரத்­தைச் செலவு செய்­தார்?

ஒரு ஆட்சி மீது நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தின் மீது பதில் சொல்­லும் பதி­லுரை எப்­படி அமைந்­தி­ருக்க வேண்­டும்? அந்த ஆட்சி இந்த நாட்டு மக்­க­ளுக்கு எந்த வகை­யில் நம்­பிக்கை தரும் ஆட்­சி­யாக அமைந்­துள்­ளது என்­ப­தைச் சொல்­வ­தாக அமைந்­தி­ருக்க வேண்­டும். தனது ஆட்சி செய்த சாத­னை­களை அடுக்­கு­வ­தாக அமைந்­தி­ருக்க வேண்­டும். ஒவ்­வொரு திட்­ட­மும் எத்­தனை கோடி மக்­க­ளுக்கு நன்மை தந்­துள்­ளது என்­பதை வரி­சைப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்க வேண்­டும். நாங்­கள் ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்பு இந்­தியா எப்­படி இருந்­தது, இப்­போது எப்­படி வளர்ந்­துள்­ளது என்­ப­தைப் புள்ளி விப­ரங்­க­ளோடு சொல்­வ­தாக அமைந்­தி­ருக்க வேண்­டும். ‘இப்­படி எல்­லாம் நன்மை செய்­தி­ருப்­ப­வர்­கள் மீது நம்­பிக்­கை­யில்லை என்று சொல்­வது எதிர்க்­கட்சிகளின் உள்­நோக்­கம் ஆகும்’ என்று முடிக்க வேண்­டும்.

மாறாக, காங்­கி­ரஸ் கட்­சியை, ராகுல் காந்­தியை, இந்­தியா முழு­மைக்­கு­மான எதிர்க்­கட்­சி­களை, ‘இந்­தியா’ கூட்­ட­ணியை, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை –- விமர்­சிப்­ப­தன் மூல­மாக பா.ஜ.க.வின் தேர்­தல் பிரச்­சார மேடை­யாக நாடாளுமன்­றத்தை பிர­த­மர் நரேந்­திர மோடி பயன்­ப­டுத்­திக் கொண்­டார்.

‘காங்­கி­ரஸ் கட்சி ஆட்­சி­யில் இருப்­ப­தைப் போல­வும் பா.ஜ.க. எதிர்க்­கட்­சி­யாக இருப்­ப­தைப் போல­வும்­தான் இந்த உரை அமைந்­தி­ருந்­தது’ என்று மிகச் சரி­யா­கவே கிண்­டல் அடித்­துள்­ளார் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள். ‘இந்­துஸ்­தான் டைம்ஸ்’ ஏட்­டுக்கு அளித்­துள்ள பதி­லில், “பிர­த­மர் நரேந்­தி­ர­மோடி தலை­மை­யி­லான பா.ஜ.க. அரசு மீது நம்­பிக்­கை­யில்லா தீர்­மா­னம் எதிர்க்­கட்­சி­க­ளால் கொண்டு வரப்­பட்­டது. மூன்று நாட்­க­ளாக பா.ஜ.க. அரசு மீதும், குறிப்­பாக பிர­த­மர் நரேந்­தி­ர­மோடி மீதும் பல்­வேறு குற்­றச்­சாட்­டு­கள் வைக்­கப்­பட்­டது.

‘INDIA’ கூட்­டணியின் வலிமை மோடிக்கு தெரிகிறது.. அந்த விரக்திதான் நாடாளுமன்றத்தில் வெளிப்பட்டது -முரசொலி !

அது எதற்­கும் பதில் சொல்­ல­வில்லை பிர­த­மர். மாறாக, தேர்­தல் மேடை­க­ளில் பேசு­வ­தைப் போல காங்­கி­ரஸ் கட்­சியை விமர்­சித்து பேசிக் கொண்டு இருந்­தார். 2014 தேர்­த­லுக்கு முன்­ன­தாக அவர் காங்­கி­ரஸ் கட்சி மீது என்ன குற்­றச்­சாட்டு வைத்­தாரோ, அதே குற்­றச்­சாட்டை 9 ஆண்­டு­க­ளுக்­குப் பிற­கும் வைத்­துக் கொண்டு இருந்தார். பிர­த­மர் உரையையாரா­வது எடுத்து முழு­மை­யா­கப் படித்­தால், இது காங்­கி­ரஸ் ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்­மா­னம் கொண்டு வந்து ‘எதிர்க்­கட்­சித் தலை­வர்’ மோடி பேசு­வ­தைப் போல இருக்­கும்” என்று சொல்லி இருந்­தார் முத­ல­மைச்­சர் அவர்­கள். இது­தான் உண்மை.

ஒரு முக்­கி­ய­மான கருத்து பிர­த­ம­ரின் உரை­யில் இருந்து தெளி­வா­கத் தெரிய வந்­துள்­ளது...

‘இந்­தியா’ கூட்­டணி வலி­மை­யோடு அமைந்­துள்­ளது என்­பது பிர­த­மர் உரை மூல­மா­கத் தெரி­கி­றது. இந்­தக் கூட்டணியின் பலம் என்­ப­தும், அது வெற்­றிக் கூட்­ட­ணி­யாக அமைந்­தி­ருக்­கி­றது என்­ப­தும் நம்மை விட பிரதமர் அதி­க­மாக உணர்ந்­துள்­ளார். தனக்கு எதி­ரான வாக்­கு­களை மொத்­த­மாக வாங்­கும் வல்­லமை ‘இந்தியா’ கூட்­ட­ணிக்கு உண்டு என்­பதை அவர் உணர்ந்­து­விட்­டார். ‘இந்­தியா’ கூட்­ட­ணித் தலை­வர்­க­ளால் தனது இமேஜ் சரிந்து விட்­டது என்­பதை அறிந்­து­விட்­டார் பிர­த­மர். அந்­தக் கோபத்­தை­தான் - – அந்த விரக்தியைத்தான் தனது உரை மூல­மாக வெளிப்­ப­டுத்த முயற்­சித்­துள்­ளார். எனவே, இது பதி­லுரை அல்ல, விரக்தி உரை!

banner

Related Stories

Related Stories