முரசொலி தலையங்கம்

“அச்சுறுத்தும் வெறுப்பு பேச்சுகள், நீதிமன்றக் கட்டடங்களையும் விட்டு வைக்கவில்லை..” - முரசொலி வேதனை !

வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது உச்சநீதிமன்றம்.

“அச்சுறுத்தும் வெறுப்பு பேச்சுகள், நீதிமன்றக் கட்டடங்களையும் விட்டு வைக்கவில்லை..” - முரசொலி வேதனை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கை!

வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது உச்சநீதிமன்றம்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 4 மாதங்களில் நடந்த 50 பொதுக்கூட்டங்களில் வெறுப்பு பேச்சு பேசப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி, உபி, உத்தரகாண்ட் மாநிலங்களில் வெறுப்பு பேச்சு குறித்தும் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

“அச்சுறுத்தும் வெறுப்பு பேச்சுகள், நீதிமன்றக் கட்டடங்களையும் விட்டு வைக்கவில்லை..” - முரசொலி வேதனை !

''வெறுப்புப் பேச்சுகள் பேசாமல் ஒவ்வொருவரும் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் அரசியலை மதத்துடன் கலக்கும் போது பெரிய பிரச்சினை எழுகிறது. அரசியலையும் மதத்தையும் பிரிக்கும் தருணத்தில் இது முடிவுக்கு வரும். அரசியல்வாதிகள் மதத்தை பயன்படுத்துவதை நிறுத்தினால் இதெல்லாம் நின்றுவிடும். மதத்துடன் அரசியலை கலப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்று சமீபத்தில் தீர்ப்பில் கூறியுள்ளோம். டிவி மற்றும் பொது இடங்களில் கூட வெறுப்பு பேச்சுகள் அதிகரித்து விட்டன. நாம் எங்கு செல்கிறோம் என்று பார்க்க வேண்டும்? பேச்சுக்களில் கொஞ்சம் கட்டுப்பாடு இருக்க வேண்டாமா? இல்லையெனில் நாம் விரும்பும் இந்தியாவாக உருவாக்க முடியாது. இந்த பேச்சுகளால் நாம் என்ன வகையான இன்பங்களை பெறுகிறோம்" என்று தங்களது கவலைகளைக் கடுமையான வார்த்தைகளால் நீதிபதிகள் எச்சரிக்கை உணர்வோடு சொல்லி இருக்கிறார்கள்.

“அச்சுறுத்தும் வெறுப்பு பேச்சுகள், நீதிமன்றக் கட்டடங்களையும் விட்டு வைக்கவில்லை..” - முரசொலி வேதனை !

''தொடர்ந்து மற்றவர்களை இழிவுபடுத்தும் வகையில் 'பாகிஸ்தானுக்கு போ' என்று பேசி வருகின்றனர். ஆனால் பிற சமூகத்தினரும் இந்த நாட்டை தேர்வு செய்துள்ளனர். அவர்களும் உங்கள் சகோதர சகோதரிகள் போன்றவர்கள். அவர்களை அவமதித்து நாட்டின் சட்டத்தை மீற உங்களுக்கு உரிமை இருக்கிறதா? நாட்டின் சட்டத்தை மீறினால், அது செங்கற்கள் போல உங்கள் தலையில் விழும். உண்மையான வளர்ச்சி என்பது நமது நாட்டை வல்லரசாக மாற்ற வேண்டும். அதற்கு நாம் சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும். அப்போதுதான் நம் நாட்டை சிறந்த வாழும் இடமாக மாற்ற முடியும்" என்றும் நீதிபதிகள் அறிவுரை கூறி இருக்கிறார்கள்.

வெறுப்புப் பேச்சுகளை அதிகம் பேசுவது மதவாத அரசியலை மேற்கொள்பவர்கள்தான். இதனை நீதிபதிகளே தெளிவுபடுத்தி விட்டார்கள்.

“அச்சுறுத்தும் வெறுப்பு பேச்சுகள், நீதிமன்றக் கட்டடங்களையும் விட்டு வைக்கவில்லை..” - முரசொலி வேதனை !

அசாம், டெல்லி, குஜராத், அரியானா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சிறுபான்மைச் சமூகத்துக்கு எதிராக வெறுப்பு வன்முறைகள் அதிகமாக நடக்கத் தொடங்கி இருக்கிறது.அதிலும் குறிப்பாக உத்தரப்பிரதேசத்தைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. இதனைக் கண்டித்தும் எச்சரிக்கை செய்தும் ஜனநாயக சக்திகள் தொடர்ந்து குரல் கொடுத்தே வருகிறார்கள்.

'நாட்டின் அரசியலமைப்புச் சட்டமே பலிபீடத்தில் வைக்கப்பட்டுள்ளது போல் உள்ளது. அதிகரித்து வரும் வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டுங்கள்' என்று பிரதமர் மோடி அவர்களுக்கு 108 பேர் கையெழுத்திட்டு கடந்த ஆண்டு மே மாதம் கடிதம் அனுப்பி இருந்தார்கள். முன்னாள் நீதியரசர்கள், முன்னாள் துணை நிலை ஆளுநர்கள், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், முன்னாள் வெளியுறவுச் செயலாளர்கள் –- இக்கடிதத்தில் கையெழுத்துப் போட்டு இருந்தார்கள். எனவே இது அநாமதேயக் கடிதம் அல்ல. அதனைத் தான் இப்போது நீதிமன்றமே சொல்லி இருக்கிறது.

“அச்சுறுத்தும் வெறுப்பு பேச்சுகள், நீதிமன்றக் கட்டடங்களையும் விட்டு வைக்கவில்லை..” - முரசொலி வேதனை !

உச்சநீதிமன்றம் சொல்வதும் இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில், 'வெறுப்பு பேச்சுகள் மீதான நடவடிக்கைக்கு புகார்கள் வரும் வரை காவல் துறை காத்திருக்கக் கூடாது' என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கட்டளையிட்டார்கள். 'இசுலாமியர்களை சமூகப் புறக்கணிப்பு செய்ய வேண்டும்' என்று பா.ஜ.க. எம்.பி. ஒருவர் பேசியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இது. இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ராய் அமர்வு விசாரித்தது.

''ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் கொண்ட இந்தியாவில் இதுபோன்ற பேச்சுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. அடிப்படை உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்க வேண்டிய கடமை நீதிமன்றத்துக்கு இருக்கிறது. நாட்டின் மதச்சார்பின்மையை பாதுகாக்கும் நோக்கில் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்க காவல் துறை முன் வர வேண்டும்" என்று நீதிபதிகள் அப்போது சொன்னார்கள். எனவே, காவல் துறையானது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுத்தால் பிரச்சினை அதிகம் ஆகாமல் தடுக்க முடியும்.

“அச்சுறுத்தும் வெறுப்பு பேச்சுகள், நீதிமன்றக் கட்டடங்களையும் விட்டு வைக்கவில்லை..” - முரசொலி வேதனை !

வெறுப்புப் பேச்சுகளை அதிகம் பேசுவது மதவாத அரசியலை மேற்கொள்பவர்கள்தான். இதை இப்போது நீதிபதிகளே தெளிவுபடுத்தி விட்டார்கள். 'அரசியலையும் மதத்தையும் பிரித்துவிட்டால் –- அரசியலில் மதம் குறித்து பேசுவதை அரசியல்வாதிகள் நிறுத்திவிட்டால் வெறுப்புப் பேச்சுகள் குறைந்துவிடும்' - என்பதே உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டும் பாதை ஆகும்.

ஆனால் இதை உணரும் நிலையில் பா.ஜ.க. இல்லை என்பதையே ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூவின் பேச்சு காட்டுகிறது. 'இந்தியா டுடே' இதழின் சார்பில் நடந்த ஒரு கருத்தரங்கில் சமீபத்தில் பேசிய ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ''இந்திய எதிர்ப்பு கும்பலின் ஒரு பகுதியாக இருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதிகள், நீதித்துறையை எதிர்க்கட்சியாக நடிக்க வற்புறுத்துகிறார்கள்" என்று சொல்லி இருக்கிறார். இது இந்திய நீதித்துறை மீதான பா.ஜ.க. அரசின் பாய்ச்சல் ஆகும். இது நீதித்துறையை கொச்சைப்படுத்துவதும், அதனையும் தங்களது வகுப்புவாத அரசியலுக்குள் இழுப்பதும் ஆகும்.

மதவாதச் சாயத்தை அரசியலுக்குள் அடித்ததைப் போல நீதித்துறைக்கும் அடிக்கும் முயற்சியாகும் இது. அச்சுறுத்தும் வெறுப்பு பேச்சுகள், நீதிமன்றக் கட்டடங்களையும் விட்டு வைக்கவில்லை.

banner

Related Stories

Related Stories