முரசொலி தலையங்கம்

“குற்றவாளிகளின் கூடாரம் அ.தி.மு.க - 13 பேர் படுகொலைக்குப் பொறுப்பேற்க வேண்டியது பழனிசாமிதான்” : முரசொலி !

ஊடகங்கள் மூலமாகத்தான் அந்தச் சம்பவம் பற்றி தெரிந்துகொண்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியது தவறான கருத்து என்பது இந்த ஆணையத்தின் கருத்தாகும்.

“குற்றவாளிகளின் கூடாரம் அ.தி.மு.க - 13 பேர் படுகொலைக்குப் பொறுப்பேற்க வேண்டியது பழனிசாமிதான்” : முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குற்றவாளிகளின் கூடாரம் – 2

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு யார் காரணம் என்பதை நீதியரசர் ஆறுமுகச்சாமி ஆணையம் அம்பலப்படுத்தியதைப் போல, தூத்துக்குடியில் 13 உயிர்கள் துள்ளத் துடிக்கக் கொல்லப்பட யார் காரணம் என்பதை நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் அம்பலப்படுத்தி இருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக் குழுவினரை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கெடுத்துக் கொள்ள அழைக்கவில்லை என்றும், போராட்டக்காரர்களை எச்சரிக்கும் விதமாக அவர்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் ஓடிக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ள தாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குற்றவாளிகளின் கூடாரம் அ.தி.மு.க - 13 பேர் படுகொலைக்குப் பொறுப்பேற்க வேண்டியது பழனிசாமிதான்” : முரசொலி !

ஸ்டெர்லைட் கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகள் தவறிவிட்டதாகவும், காவல்துறை உயர் அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை எனவும் அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் 5 பேர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், கலவரம் நடந்து கொண்டிருந்த போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் ஊரில் இல்லை எனவும் – நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களை ஒடுக்குவதாக எண்ணி காவல் துறையினர் வரம்புமீறிச் செயல்பட்டுள்ளதாகவும், தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் காவலர்கள் தாக்கியுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமாக இருந்த 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

“குற்றவாளிகளின் கூடாரம் அ.தி.மு.க - 13 பேர் படுகொலைக்குப் பொறுப்பேற்க வேண்டியது பழனிசாமிதான்” : முரசொலி !

தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகள் தெரிவிக்கவில்லை என்றும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் கடமையிலிருந்து தவறியதும், அவரது அலட்சியமான நடவடிக்கையே போராட்டம், துப்பாக்கிச் சூட்டில் முடிய அடித்தளமாக இருந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுடலைக்கண்ணு என்பவர் தனி ஆளாக, அபாயகரமான துப்பாக்கியைக் கொண்டு மொத்தம் 17 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிப் பிரயோகத்தைத் தவிர்த்து இருந்திருக்கலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய கொடூரத்தில் 13 உயிர்கள் பலியாயின. இது நடந்தது அ.தி.மு.க. ஆட்சியில். அப்போது முதலமைச்சராக இருந்தவர் பழனிசாமி. அவர் கையில்தான் உள்துறை இருந்தது. அப்படியானால் அவருக்குத் தெரியாமல், அவர் உத்தரவு இல்லாமல் இந்தக் கொடூரம் நடக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அவர் அப்போது என்ன சொன்னார்? “டி.வி.யைப் பார்த்துதான் நானே தெரிந்து கொண்டேன்” என்றார். இதைவிடக் கையாலாகாப் பதில் இருக்க முடியாது.

“குற்றவாளிகளின் கூடாரம் அ.தி.மு.க - 13 பேர் படுகொலைக்குப் பொறுப்பேற்க வேண்டியது பழனிசாமிதான்” : முரசொலி !

பொய்ச்சாமிதான் இந்த பழனிசாமி என்பதை அருணா ஜெகதீசன் ஆணையம் அம்பலப்படுத்தி விட்டது. அறிக்கையின் 2 ஆவது பாகம் - 219 ஆவது பக்கத்தில் இடம் பெற்றுள்ள 252 ஆவது கருத்து இது:

* The then Chief Minister Tr. Edappadi K. Palaniswami is quoted as having told the reporters of the media that he came to know of the shooting in Thoothukudi only through the media just like anybody else.

It may be pointed out that there are materials available before this Commission in the shape of evidence of the then Chief Secretary Tmt.

Girija Vaidyanathan., I.A.S. (RW 251), the then DGP Tr. K. Rajendran I.P.S., (RW 253), the then IG Intelligence Tr. K.N. Sathiyamurthy., I.P.S., (RW 249) have been updating the Chief Minister Tr. Edapadi K. Palanisamy with minute to minute development which took place in Thoothukudi and as such to say that the then Chief Minister come to know of the shooting only through the media would be incorrect or inaccurate - the Commission would opine” – என்று தெளிவாகச் சொல்லப்பட்டு விட்டது.

“குற்றவாளிகளின் கூடாரம் அ.தி.மு.க - 13 பேர் படுகொலைக்குப் பொறுப்பேற்க வேண்டியது பழனிசாமிதான்” : முரசொலி !

‘’தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி அப்போதைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘அந்தச் சம்பவத்தை மற்றவர்களைப் போல ஊடகங்களில் வந்த செய்தி மூலம் அறிந்து கொண்டேன்’ என்று பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

ஆனால் இந்த ஆணையத்திடம் மிக வலுவாக இருக்கும் ஆதாரம் என்னவென்றால், சாட்சியாக விசாரிக்கப்பட்ட அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அப்போதைய டி.ஜி.பி. ராஜேந்திரன், அப்போதைய உளவுத்துறை ஐ.ஜி.சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடியில் நடக்கும் சம்பவங்களையும், அங்குள்ள நிலவரங்களையும் நிமிடத்துக்கு நிமிடம் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து வந்ததாகக் கூறினார்கள்.

“குற்றவாளிகளின் கூடாரம் அ.தி.மு.க - 13 பேர் படுகொலைக்குப் பொறுப்பேற்க வேண்டியது பழனிசாமிதான்” : முரசொலி !

எனவே, ஊடகங்கள் மூலமாகத்தான் அந்தச் சம்பவம் பற்றி தெரிந்துகொண்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியது தவறான கருத்து என்பது இந்த ஆணையத்தின் கருத்தாகும்” - என்று ஆணையத்தின் அறிக்கை சொல்கிறது. 13 பேர் படுகொலைக்குப் பொறுப்பேற்க வேண்டியது பழனிசாமி அல்லவா?

‘‘இறந்து போனவர்களின் பின்னந்தலை வழியாக குண்டு துளைத்து, முன் தலை வழியாக உள்ளுறுப்புகளைச் சிதைத்து குண்டு வெளியேறியதும், சிலருக்கு முதுகின் பின்பகுதியில் குண்டு துளைத்து இதயம் போன்ற முக்கியப் பகுதியைச் சிதைத்து மார்பின்வழியாக வெளியேறியதும், ஓடிக் கொண்டிருந்தவர்களின் மீது துப்பாக்கிச் சூடு பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது” என்பதைக் காட்டுவதாக ஆணைய அறிக்கை சொல்கிறது. ( தொகுதி 3, பக்கம் 25) இந்தக் கொடூரத்துக்கு குற்றவாளி பழனிசாமி அல்லவா?

banner

Related Stories

Related Stories