முரசொலி தலையங்கம்

“மகாராஷ்டிராவில் ‘ஆபரேஷன் தாமரை’ - பாஜகவின் சூழ்ச்சி என்ன?” : ஆதாரங்களுடன் உண்மையை போட்டுடைத்த முரசொலி !

‘மகாராஷ்டிரா சிவசேனை கூட்டணி பிளவுக்குப் பின்னணியில் பா.ஜ.க.' என்று பி.பி.சி. மராத்தில் மொழிப்பிரிவின் ஆசிரியர் ஆஷிஷ் தீக்சித் விரிவாக எழுதி இருக்கிறார்.

“மகாராஷ்டிராவில் ‘ஆபரேஷன் தாமரை’ - பாஜகவின் சூழ்ச்சி என்ன?” : ஆதாரங்களுடன் உண்மையை போட்டுடைத்த முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகி இருக்கிறார். இதனை அக்கட்சியின் உட்கட்சி மோதலாக பார்க்கும் அளவுக்கு அப்பாவி மனோபாவம் யாருக்கும் இருக்காது. இது பா.ஜ.க.வின் ‘ஆபரேஷன் தாமரை' தான் என்று ஊடகங்கள் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

அந்த மாநிலத்தின் பா.ஜ.க. தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், சில மாதங்களாகவே ‘இந்த அரசு விரை கவிழும்' என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அதுதான் இப்போது நடந்திருக்கிறது. இதனையே முன்னாள் முதலமைச்சரான தேவேந்திர பட்னவிஸும் சொல்லி வந்தார். ஆனால் கவிழ்ப்புக்கான வேலைகள் வெளிப்படையாக நடக்கத் தொடங்கியதும், ‘இது சிவசேனாவின் உட்கட்சி விவகாரம்' என்று நல்ல பிள்ளைகளைப் போலச் சொல்லிக் கொண்டார்கள்.

“மகாராஷ்டிராவில் ‘ஆபரேஷன் தாமரை’ - பாஜகவின் சூழ்ச்சி என்ன?” : ஆதாரங்களுடன் உண்மையை போட்டுடைத்த முரசொலி !

இந்த ஆபத்தான ஆபரேஷனை எப்படி எல்லாம் செய்தார்கள் என்பதையும், அதற்கு பயன்படுத்தப்பட்டவர்கள் யாரெல்லாம் என்பதையும் மராட்டிய ஊடகங்களே அம்பலப்படுத்தி வருகின்றன.

‘மகாராஷ்டிரா சிவசேனை கூட்டணி பிளவுக்குப் பின்னணியில் பா.ஜ.க.' என்று பி.பி.சி. மராத்தில் மொழிப் பிரிவின் ஆசிரியர் ஆஷிஷ் தீக்சித் விரிவாக எழுதி இருக்கிறார். ஐந்து ஆதாரங்களை இவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

1. சிவசேனாவைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சூரத் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் போது உடனிருந்த மோஹித் கம்போஜ் மும்பையில் பாரதிய ஜனதா கட்சியின் நன்கு அறியப்பட்ட முகம். இது சிவசேனையின் உள் விவகாரம் என்றால், சிவசேனையின் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களுக்கு உதவ கம்போஜ் ஏன், எதற்காக அங்கு வந்தார்?

ஐந்து நட்சத்திர ஹோட்டல் மற்றும் விமானத்தை முன்பதிவு செய்தது யார்? மோஹித் கம்போஜ் உத்தரப்பிர தேசத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு பணக்கார நகை வியாபாரி. கடந்த 2014ஆம் ஆண்டு மும்பையின் டிண்டோஷி தொகுதியில் அவருக்கு பா.ஜ.க. டிக்கெட் கொடுத்தது.

“மகாராஷ்டிராவில் ‘ஆபரேஷன் தாமரை’ - பாஜகவின் சூழ்ச்சி என்ன?” : ஆதாரங்களுடன் உண்மையை போட்டுடைத்த முரசொலி !

அப்போது அவருக்கு இருநூற்றி ஐம்பது கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் அளித்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டிருந்தது. பல பழைய தலைவர்களை ஒதுக்கிவிட்டு கம்போஜுக்கு எப்படி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றி பல விவாதங்கள் நடந்தன. தேர்தலில் தோற்றாலும் கட்சியில் அவருக்கு அந்தஸ்து குறைய வில்லை. மும்பை காவல்துறையின் பொருளாதாரக் குற்றப் பிரிவும் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளது.

2. டாக்டர் சஞ்சய் குட்டே பா.ஜ.க.வின் இளைஞர் அணித்தலைவர். தேவேந்திர ஃபட்னாவிஸின் நம்பிக்கைக்குரியவர். சிவசேனையின் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் சூரத் சென்றதும், முதலில் சஞ்சய் குட்டே அங்கு சென்றடைந்தார். உத்தவ் தாக்கரேவின் பிரதிநிதி மிலிந்த் நர்வேகர் சூரத்தில் உள்ள ஹோட்டலுக்கு வருவதற்கு முன்பே, ஏக்நாத் ஷிண்டேவை சஞ்சய் குட்டே சந்தித்தார். எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்தது மட்டுமின்றி அவர் அங்கேயே உடனிருந்தார்.

சிவசேனையின் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் குவஹாத்தியை அடைந்த போது, குட்டேவும் அங்கு இருந்தார். சட்டப்பேரவையில் தேவேந்திர ஃபட்னவிஸின் பின் பெஞ்சில் அமர்ந்திருப்பார் இவர். சமீபத்தில் நடந்த மாநிலங்களவை மற்றும் சட்டமேலவை தேர்தல்களின் போதும், டாக்டர் சஞ்சய் குட்டே வாக்குச்சாவடி முகவராக பணியாற்றினார்.

“மகாராஷ்டிராவில் ‘ஆபரேஷன் தாமரை’ - பாஜகவின் சூழ்ச்சி என்ன?” : ஆதாரங்களுடன் உண்மையை போட்டுடைத்த முரசொலி !

3. சிவசேனை கட்சியின் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தலைவர் மீது மட்டுமே கோபமாக இருந்தால், மகாராஷ்டிராவில் எங்கு வேண்டுமானாலும் இருந்துகொண்டு போனை அணைத்துவிட்டு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கலாம். மகாராஷ்டிராவிற்குள் ஆயிரக்கணக்கான ஹோட்டல்கள் உள்ளன. முன்னதாக, அஜித் பவாரோ அல்லது வேறு எந்த தலைவரோ கோபப்பட்டால், அவர்கள் மாநிலத்தில் எங்காவது சென்று தனது தொலைபேசிகளை அணைத்து விடுவார்கள்.

ஆனால் ஏக்நாத் ஷிண்டே குழுவினர் அவ்வாறு செய்யவில்லை. அவர்கள் லோனாவாலா அல்லது முல்ஷிக்குச் செல்லவில்லை. மகாராஷ்டிராவின் எல்லையைக் கடந்து குஜராத் சென்றார்கள். குஜராத், பா.ஜ.க. ஆளும் மாநிலம் மட்டுமல்ல, மோதி-ஷாவின் வலுக் கோட்டையும் ஆகும்.

குஜராத் காவல் துறையின் பாதுகாப்பில் அவர்கள் அங்கு தங்கியிருப்பது தெளிவாகத் தெரிந்தது. அதன்பிறகு எல்லா எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க. ஆளும் மற்றொரு மாநிலமான அசாமுக்குச் சென்றனர். அங்கும் அவர்களுக்கு உள்ளூர் போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர். இது சிவசேனையின் உள் அதிருப்தி என்றால், இந்த மராட்டிய எம்.எல்.ஏ.க்கள் ஏன் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள குவஹாத்திக்குச் செல்ல வேண்டும்? பா.ஜ.க.வின் உதவி இல்லாமல் இதெல்லாம் சாத்தியமில்லை.

“மகாராஷ்டிராவில் ‘ஆபரேஷன் தாமரை’ - பாஜகவின் சூழ்ச்சி என்ன?” : ஆதாரங்களுடன் உண்மையை போட்டுடைத்த முரசொலி !

4. உத்தவ் தாக்கரேவிடம் ஏக்நாத் ஷிண்டே விடுத்த கோரிக்கை அவரது சொந்த அதிருப்தி தொடர்பானது அல்ல. அவர் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார். ஷிண்டே, உத்தவ் தாக்கரே மீது உண்மையிலேயே கோபமாக இருந்திருந்தால், பா.ஜ.க.வுடன் செல்வது பற்றி பேசாமல், தனது புகாரை மட்டும் அவர் முன் வைத்திருப்பார்.

ஷிண்டே சிவசேனையை விட்டு வெளியேற விரும்பவில்லை என்றால், வேறு கட்சியின் தலைவருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற விசித்திரமான கோரிக்கையை அவர் முன்வைத்திருக்க மாட்டார்.

5. இந்த நெருக்கடியின் போது ஏக்நாத் ஷிண்டேவின் மொழியைக் கூர்ந்து கவனித்தால், அவர் பா.ஜ.க.வின் மொழியில் பேசுகிறார் என்பதைக் காட்டுகிறது. “அதிகாரத்துக்காக பாலாசாஹேப்பின் இந்துத்துவ கொள்கையை கைவிடுவது சரியல்ல.” என்று அவர் சொன்னார். ஃபட்னவிஸ், சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் பல பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர்கள் இதே வாக்கியத்தை இதற்கு முன்பு பலமுறை பேசியிருக்கிறார்கள்.

பா.ஜ.க. சிவசேனையுடன் உறவை முறித்துக் கொண்டது. ஆனாபாலாசாஹேபின் வாரிசு என்று தன்னை கூறிக்கொண்டது. காங்கிரஸ்- என்.சி.பி.யுடன் சிவசேனை சென்றதிலிருந்து, அதிகாரத்திற்காக உத்தவ் தாக்கரே பாலா சாஹேப்பின் இந்துத்துவாவை சமரசம் செய்து கொண்டார் என்று ஃபட்னவிஸ் பலமுறை கூறி வந்தார். இதைத்தான் இப்போது ஏக்நாத் ஷிண்டே கூறுகிறார். இதுதான் மகாராஷ்டிராவில் நடந்த ஆபரேஷன் காட்சிகள்.

banner

Related Stories

Related Stories