முரசொலி தலையங்கம்

அப்பாவி மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளின் ஆட்சி! - முரசொலி தலையங்கம் 

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இன்றைய மத்திய, மாநில அரசுகள் அப்பாவி மக்களின் உடலில் ‘அட்டை’களைப் போல் ஒட்டிக்கொண்டு ரத்தத்தை எலும்புவரை ஊடுருவி உறிஞ்சுகின்றன என்பதற்கு உதாரணம் தான் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை’ திட்டம்.

எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியால் நடக்கும் ஆட்சியில், காமராசர் பெயரைக் கெடுக்க அவர் பெயரை தாங்கிய ஒரு அமைச்சர் டெல்லிக்கு போய் ‘ஒரே ரேஷன் அட்டை’க்கு தமிழகத்தின் சார்பாக தலையாட்டி விட்டு வந்திருக்கிறார்.

இது மக்களாட்சி அல்ல 30 மந்திரிகளுக்காக மட்டுமே நடக்கும் ஆட்சி, என மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் ஆட்சியாளர்களின் இந்த நடவடிக்கையை முரசொலி நாளேடு வன்மையாக கண்டித்துள்ளது.

banner