மு.க.ஸ்டாலின்

“தனி நபரை விட இயக்கத்தின் வெற்றியே முக்கியம்..” - கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் !

ஒன்றியத்தில் இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்ற கருத்து பரவலாக ஏற்பட்டு விட்டது. எனவே, இந்த நேரத்தில் நமது பொறுப்பும் கடமையும் அதிகமாகி உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

“தனி நபரை விட இயக்கத்தின் வெற்றியே முக்கியம்..” - கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இன்று திமுகழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கழக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர்கள் பொறுப்பாளர்கள் என பலரும் பங்கேற்றனர். அப்போது அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அப்போது பேசிய கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 40 தொகுதிகளில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :

"பொது முக்கியத்துவம் வாய்ந்த சில கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு, விரைந்து செயல்பட வேண்டிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். அதனால்தான் உடனடியாகக் காணொலி மூலமாக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“தனி நபரை விட இயக்கத்தின் வெற்றியே முக்கியம்..” - கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் !

நம்மை எதிர்நோக்கி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட நாற்பது தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும். தமிழ்நாட்டில் அடைவது போன்ற வெற்றியை இந்தியா முழுமைக்கும் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தியா கூட்டணியை அமைத்துள்ளோம்.

அகில இந்தியக் கட்சிகளும் பல்வேறு மாநிலங்களை ஆளும் கட்சிகளும் - வலுவான மாநிலக் கட்சிகளும் - இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. பாரதீய ஜனதா கட்சி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்க முடியாது; இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்ற கருத்து பரவலாக ஏற்பட்டு விட்டது. எனவே, இந்த நேரத்தில் நமது பொறுப்பும் கடமையும் அதிகமாகி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் பணியை கடந்த ஆறு மாதத்துக்கு முன்பே நாம் தொடங்கினோம். நமது ற்றிக்கு அடித்தளமாக விளங்கக்கூடிய வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமித்தோம். இதுவரையில் அவர்களுக்கான மூன்று பயிற்சிபாசறைக் கூட்டங்கள், தேர்தல் சிறப்பு மாநாடுகளைப் போல நடந்துள்ளன.

“தனி நபரை விட இயக்கத்தின் வெற்றியே முக்கியம்..” - கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் !

அடுத்ததாக வடக்கு மண்டல பயிற்சி பாசறைக் கூட்டம் திருவண்ணாமலையிலும், சென்னை மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டமும் நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சி பாசறைக் கூட்டங்களில் நாம் எடுத்துச் சொன்னதைச் செயல்படுத்தினாலே போதும். முழுமையான வெற்றியை நாம் அடைந்து விடலாம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட 39 தொகுதிகளை வென்றோம் என்றால், நடக்க இருக்கும் தேர்தலில் 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும். எந்தவொரு தனிமனிதரையும் விட இயக்கமும் - இயக்கம் அடைய வேண்டிய வெற்றியும்தான் முக்கியம்.

மக்கள் நன்றாக இருக்கிறார்கள். அதனை வாக்குகளாக மாற்றுவதற்கு உழையுங்கள். உழைப்பும் செயல்பாடும்தான் வெற்றியைப் பெற்றுத் தரும். திட்டமிட்டு உழையுங்கள். தி.மு.க. கூட்டணி அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற உழையுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்."

banner

Related Stories

Related Stories