மு.க.ஸ்டாலின்

ஒடிசா ரயில் விபத்து.. உடனடியாக களத்தில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. முதலமைச்சர் துரித நடவடிக்கை !

ஒடிசா ரயில் விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துரித நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து.. உடனடியாக களத்தில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. முதலமைச்சர் துரித நடவடிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் ஹவுராவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும், சரக்கு ரயிலும் ஒரே பாதையில் வந்ததால் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.

அதோடு, இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 - 8 பெட்டிகள் பெட்டிகள் தடம் புரண்டு அடுத்த பாதையில் விழுந்துள்ளது. அப்போது அந்த பாதையில் வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயிலும் இந்த ரயிலின் மீது மோதியதாகவும் யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயிலின் 2 - 3 பெட்டிகள் தடம் புரண்டதாகவும் ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்துள்ளார். எனினும் விசாரணைக்கு பின்னரே முழு விவரமும் தெரியவரும்.

மனித தவறுகள் காரணமாகவோ அல்லது சிக்னல் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியான நிலையில், உடனடியாக மீட்புப் பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டன. இந்த சம்பவம் அறிந்து முதலில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீட்புப்பணியில் உடனடியாக களமிறங்கினர். அதோடு சம்பவம் நடந்த இடம் வனப்பகுதி என்பதால் உடனடியாக அந்த பகுதிக்கு மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து.. உடனடியாக களத்தில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. முதலமைச்சர் துரித நடவடிக்கை !

இந்த கோர விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பொது பெட்டியில் பயணம் செய்த ஏராளமான பயணிகள் உயிரிழந்தனர். மேலும், ரயில் பெட்டிகளும் பயங்கர சேதமடைந்துள்ள நிலையில், அதில் ஏராளமானோர் சடலமாக மீட்கப்பட்டதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். அதோடு படுகாயமடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் தற்போதுவரை 280 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளாதாகவும் சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த தகவலை ஒடிசா தலைமை செயலரும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விபத்து நடைபெற்றுள்ள இடத்துக்கு ராணுவத்தினரும் மீட்புபணிக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

ஒடிசா ரயில் விபத்து.. உடனடியாக களத்தில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. முதலமைச்சர் துரித நடவடிக்கை !

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் துரிதமாக செயல்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும், தமிழ்நாட்டின் மருத்துவக் குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும் ஒடிசா மாநில முதலமைச்சரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

மேலும் மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ் நாட்டினருக்குத் தேவையான உதவிகளைச் செய்திட போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் கொண்ட குழு விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு விரைந்து சென்றுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து.. உடனடியாக களத்தில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. முதலமைச்சர் துரித நடவடிக்கை !

தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒடிசா ரயில் விபத்து தொடர்பான மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், ஒடிசா மாநில அதிகாரிகளிடம் காணொளி காட்சி வாயிலாக விபரங்களையும் கேட்டறிந்தார். தொடர்ந்து சென்னை சென்ட்ரல் தெற்கு ரயில்வே அலுவலகத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒடிசா ரயில் விபத்து தொடர்பான மீட்பு பணிகள் குறித்தும், பயணிகள் நிலை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதோடு ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் மட்டுமே துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், ஓடிசா ரயில் விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories