மு.க.ஸ்டாலின்

“தமிழ்நாட்டு ஆட்சியினுடைய சிறப்புக்களை என்னோடு பகிர்ந்து கொண்டார்கள்”: டெல்லியில் முதல்வர் அளித்த பேட்டி!

இரண்டு பேரும் என்னிடத்தில் மகிழ்ச்சியாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலைகள், ஆட்சியினுடைய சிறப்புக்களை என்னோடு பகிர்ந்து கொண்டார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டு ஆட்சியினுடைய சிறப்புக்களை என்னோடு பகிர்ந்து கொண்டார்கள்”: டெல்லியில் முதல்வர் அளித்த பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.08.2022) டெல்லியில், இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் இந்திய குடியரசு துணைத் தலைவர் ஆகியோரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், “நேற்று இரவு டெல்லிக்கு வந்த நான் இன்று காலையில் குடியரசுத் தலைவர் அவர்களையும், குடியரசுத் துணைத் தலைவர் அவர்களையும், நேரில் சென்று நான் சந்தித்தேன். என்னுடைய நல்வாழ்த்துகளை அவர்களுக்கு தெரிவித்துவிட்டு வந்திருக்கிறேன்.

குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோரின் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வந்திருந்தது, ஆனால் என்னால் வர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. ஆனாலும், இன்றைக்கு நான் நேரடியாக நேரம் கேட்டு அவர்களைச் சென்று சந்தித்து என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து வந்திருக்கிறேன்.

“தமிழ்நாட்டு ஆட்சியினுடைய சிறப்புக்களை என்னோடு பகிர்ந்து கொண்டார்கள்”: டெல்லியில் முதல்வர் அளித்த பேட்டி!

இரண்டு பேரும் என்னிடத்தில் மகிழ்ச்சியாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலைகள், ஆட்சியினுடைய சிறப்புக்களைப் பற்றியெல்லாம் என்னோடு பகிர்ந்து கொண்டார்கள். எனவே என்னைப் பொறுத்தவரை, இந்தச் சந்திப்பு மன நிறைவாக இருந்தது.

தொடர்ந்து, இன்று மாலை 4.00 மணியளவில் இந்தியப் பிரதமரை சந்திக்க இருக்கிறேன். அதற்கு என்ன காரணம் என்று கேட்டீர்கள் என்றால், 180-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த செஸ் வீரர்கள் கலந்து கொண்ட சென்னையில் நடந்த 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்க வேண்டும் என்று நாங்கள் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, பிரதமர் அவர்கள் நேரடியாக சென்னைக்கே வந்து அதைத் தொடங்கி வைத்தார்கள்.

அதேபோல, அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழை நேரடியாக நான் வந்து கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினால், நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்திக் கொண்டேன் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அதனால் நேரடியாக வந்து நான் அழைப்பிதழை தர முடியாத சூழ்நிலையில் இருந்ததால், நான் தொலைபேசியில் அந்தச் செய்தியைச் சொன்னதற்குப் பிறகு அவரே நேரடியாக வந்து அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

“தமிழ்நாட்டு ஆட்சியினுடைய சிறப்புக்களை என்னோடு பகிர்ந்து கொண்டார்கள்”: டெல்லியில் முதல்வர் அளித்த பேட்டி!

போட்டியை தொடங்கி வைத்த அவருக்கு நன்றி சொல்லிவிட்டு செல்வதற்காகத்தான் இன்றைக்கு நேரடியாக வந்து நன்றி சொல்வதற்காக இன்று மாலை 4 மணியளவில் நான் சந்திக்க இருக்கிறேன். அதே நேரத்தில், நான் முதலமைச்சராக பொறுப்பேற்று இரண்டு, மூன்று முறை டெல்லிக்கு வந்து பிரதமர் அவர்களைச் சந்தித்து தமிழ்நாட்டினுடைய பல்வேறு கோரிக்கைகளையெல்லாம் நான் எடுத்து வைத்திருக்கிறேன்.

அந்தக் கோரிக்கைகளை ஓரளவு நிறைவேற்றக்கூடிய சூழ்நிலை இருந்தாலும், இன்னும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. ஆகவே, அதையும் நினைவூட்டி அந்தக் கோரிக்கையையும் நேரடியாக சந்திக்கின்றபோது நான் எடுத்துவைக்க இருக்கிறேன். இன்று இரவே நான் சென்னை திரும்ப இருக்கிறேன் என்பதையும் சொல்லி, உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

“தமிழ்நாட்டு ஆட்சியினுடைய சிறப்புக்களை என்னோடு பகிர்ந்து கொண்டார்கள்”: டெல்லியில் முதல்வர் அளித்த பேட்டி!

கேள்வி: என்னென்ன கோரிக்கைகளை பிரதமரிடத்தில் கொடுக்க இருக்கிறீர்கள்?

முதலமைச்சர் அவர்களின் பதில்: ஏற்கனவே சொன்ன நீட் பிரச்சனை, அதற்குப் பிறகு புதிய கல்விக் கொள்கை, மின்சாரம், காவேரி பிரச்சனை, மேகதாது பிரச்சனை போன்ற பல கோரிக்கைகளை தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறோம். அதையெல்லாம் மீண்டும் நினைவுபடுத்துவோம்.

கேள்வி: குடியரசுத் தலைவரை பார்த்துக்கூட நீட் விலக்கு மசோதாவிற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறீர்களா?

முதலமைச்சர் அவர்களின் பதில்: ஏற்கனவே இருந்த குடியரசுத் தலைவர் அவர்களிடம் இந்தக் கோரிக்கையை வைத்திருக்கிறோம். அதேமாதிரி, பிரதமரிடத்திலும் தொடர்ந்து வைத்திருக்கிறோம், இன்றைக்கும் வைக்க இருக்கிறோம். ஆனால், புதிதாக அவர் இப்போதுதான் பொறுப்பேற்றிருப்பதால் எந்தக் கோரிக்கையும் குடியரசுத் தலைவர் அவர்களிடம் வைக்கவில்லை. மரியாதை சந்திப்பு தான், வாழ்த்து சொல்லத்தான் வந்தேன்.

கேள்வி: செஸ் ஒலிம்பியாட் போட்டியை நல்லமுறையில் நடத்தியதற்காக குடியரசுத் தலைவர் உங்களுக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், உங்களுக்கு காலை உணவு கொடுத்ததாகவும்…

முதலமைச்சர் அவர்களின் பதில்: எப்போதுமே குடியரசுத் தலைவரை ஒரு முதலமைச்சர் சந்திக்க வந்தார் என்றால் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான், அதற்காக கொடுத்ததாக நான் நினைக்கவில்லை.

banner

Related Stories

Related Stories