மு.க.ஸ்டாலின்

“வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் வேலைசெய்வேன்; தமிழகத்தை காப்பதே முதல்பணி” -முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை பாதுகாக்க மருத்துவர்கள் செவிலியர்கள் உயிரைப் பணையம் வைத்து பணியாற்றி வருகின்றார்கள். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும், உற்சாகப்படுத்த வேண்டும், நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.

“வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான்  வேலைசெய்வேன்; தமிழகத்தை காப்பதே முதல்பணி” -முதல்வர் மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செய்தியாளர்:- செங்கல்பட்டு மாவட்டத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் ஆலை செயல்பட கோரிக்கை விடுக்கப்பட்டதன் தற்போதைய நிலை?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: செங்கல்பட்டு மாவட்டத்தில் தடுப்பூசி உற்பத்தி ஆலை செயல்பட ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் தேவையை மனதில் வைத்துதான் ஒன்றிய அரசின் மூலம் உருவாக்கப்பட்ட தொழிற்சாலையை, மாநில அரசு சார்பில் நடத்துகிறோம் என்று கேட்டிருக்கிறோம். ஒன்றிய அரசு ஒத்துழைத்தால் அதையேற்று உடனடியாக நடத்தி 100 கோடி ,200 கோடி செலவு செய்தால் அந்தத் தொழிற்சாலை முழுமையடையும் என்ற நிலையில் இருக்கின்றது.

ஆனால் அதை ஒன்றிய அரசுகிடப்பில் போட்டு வைத்திருக்கின்றது. அதற்காக நானே நேரடியாக போய் பார்த்து ஆய்வு நடத்தி அது சம்மந்தமாக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களையும், மக்களவை குழுத்தலைவர் முன்னாள் ஒன்றிய அமைச்சர் டி.ஆர்.பாலு அவர்களையும், டெல்லிக்கு அனுப்பி சம்மந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து நான் கொடுத்த கடித்தத்தை அவர்களிடத்தில் கொடுத்து பேசியிருக்கிறார்கள். ஒருவார காலத்தில் ஆலோசனை செய்து சொல்கின்றேன் என்று தொரிவித்துள்ளனர். ஒன்று ஒன்றிய அரசு ஏற்று அதை நடத்த வேண்டும், அல்லது மாநில அரசிடம் அதை ஒப்படைக்க வேண்டும், மூன்றாவது அலை, நான்காவது அலை என்று பல்வேறு தரப்பினர் செல்கின்றனர். அதனால் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதால் இந்த முயற்சியை அரசு எடுத்திருக்கின்றது.

செய்தியாளர் :- தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு எப்போது அமல்படுத்தப்படும்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: சில தளர்வுகள் கொடுத்துள்ளோம் காய்கறிகள் வீடு வீடாக கொண்டு போய் கொடுக்கும் சூழலை உருவாக்கியுள்ளோம், மளிகைப் பொருட்களைப் பொறுத்த அளவில் அந்தந்த வியாபாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டால் வீடு வீடாக கொண்டு செல்லும் வாய்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளோம். இந்த வாரம் தளர்வுகளில்லா ஊரடங்கை செயல்படுத்தியுள்ளோம். இவ்வாறு அமல்படுத்தி வெற்றி பெற்றால்தான் நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும், அடுத்த ஊரடங்கினை அறிவிக்கும் போது அதைப்பற்றி யோசித்து அறிவிக்கப்படும்.

தடுப்பூசி போடாதவர்களே இல்லை என்கிற நிலை

செய்தியாளர் : தமிழக அரசு கொள்முதல் செய்யும் தடுப்பூசி ஒருநாளும்,ஒன்றிய அரசு வழங்கும் தடுப்பூசி ஒருநாளும் போடப்படுவதால், மக்கள்தடுப்பூசி போடமுடியாமல் திரும்பிச்செல்லும் நிலை உள்ளதே?

அமைச்சர் மா.சுப்பிரமணியன்:- தடுப்பூசிகளைப் பொறுத்தவரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் ஒன்றிய அரசிடமிருந்து 83 லட்சம் அளவுக்கு இதுவரை வந்துள்ளது. 18 முதல் 44 வயதினருக்கான தடுப்பூசிகளை தமிழக அரசு சார்பில் கொள்முதல் செய்வதற்காக அங்கு கட்டியுள்ள பணம் 85 கோடியே 48 லட்சம். இதன் மூலம் வர வேண்டியது 25 லட்சம் தடுப்பூசிகள். அதில் 13 லட்சம் தடுப்பூசிகள் வந்திருக்கிறது. இதிலேயே இன்னும் 12 லட்சம் தடுப்பூசிகள் வரவேண்டி உள்ளது. மொத்தம் 96 லட்சம் தடுப்பூசிகள் இதுவரை வந்துள்ளன. இதில் 86 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் மிகக் குறைவாகவே - ஒன்றரை லட்சம் அளவுக்கு மட்டுமே இருப்பு உள்ளது.

ஒன்றியஅரசிடமிருந்து வரவர அது சரியாகப் பிரித்துஅனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு, எப்போது எங்கே முகாம்கள் அமைக்கப்படும் என்பது குறித்த விவரங்கள் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட இருக்கிறது.18 வயது முதல் 44 வயது வரை தமிழக அரசு கட்டிய பணம் 85.48 கோடி ரூபாய், வாங்க வேண்டிய தடுப்பூசியின் அளவு 25 இலட்சம், இதுவரை வந்திருப்பது 13 இலட்சம், அதுவே இன்னும் 12 இலட்சம் தடுப்பூசிகள் வர வேண்டியுள்ளது. வர வர தடுப்பூசி போடப்படும், அதனால்தான் கூடுதலாக 3.50 கோடி தடுப்பூசி பெறுவதற்கு தமிழக அரசின் மூலம் உலகளாவிய ஒப்பந்தம் விடும் முயற்சியில் தமிழக முதலமைச்சர் ஈடுபட்டுள்ளார்.

நம்மைப் பார்த்துத்தான் கேரள அரசு 3.50 கோடி தடுப்பூசிகள் பெறுவதற்கு உலகளாவிய ஒப்பந்தம் கோரியுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளது போல செங்கல்பட்டில் உள்ள ஹெச்எல்எல் தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியினை தாங்கள் அறிவீர்கள். முதலமைச்சர் அத்தொழிற்சாலையை நேரடியாக சென்று பார்த்தார். அடுத்தநாள் ஆய்வுக்கூட்டம் நடத்தினார், அன்றைய தினமே டெல்லிக்கு தொழில்துறை அமைச்சரை அனுப்பி பேசவைத்தார்கள். அவர்கள் ஒரு வார அவகாசம்கேட்டுள்ளார்கள். இதெல்லாம் நடந்தால்தமிழ்நாட்டில் தடுப்பூசி போடாத வர்களேஇல்லை என்ற நிலை உருவாகும்.

செய்தியாளர்:- பொது முடக்கத்தினால் வங்கிகளில் வாங்கிய கடன்கள்வீட்டுக் கடன்கள் கட்ட முடியாமல்பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டுவருகின்றனர் இதற்கு தமிழக அரசால்ஒன்றிய அரசிடமோ, RBI மூலமாகவோ, அவகாசம் வழங்க கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஒன்றிய அரசிற்கு இரண்டு முறை கடிதம் எழுதியுள்ளோம். ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம், அதன் பதிலை எதிர்பார்த்துள்ளோம். பதில் வந்தவுடன் அதுகுறித்து முடிவெடுக்கப்படும்.

ஒட்டுமொத்த தமிழகத்தை பாதுகாப்பதே முதல் பணி.

செய்தியாளர்: ஒரு சிலர் குறிப்பாக கோயம்புத்தூர் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகிறார்களே, அது பற்றி உங்களுடைய கருத்து என்ன?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: தடுப்பூசியே சென்னைக்கு அடுத்தது கோவையில்தான் அதிகமாக போடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கோவைக்கு வருவது இது இரண்டாவது முறை. நான் முன்னரே சொன்னபடி, ஓட்டுபோட்ட மக்களுக்கு மட்டுமல்ல ஓட்டுபோடாத மக்களுக்கும் சேர்த்து நான் வேலைசெய்வேன். ஓட்டுப்போட்டவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும், ஓட்டு போடாதவர்கள் ஏன் ஓட்டுபோடவில்லை என்று வருத்தப்பட வேண்டும். அப்படித்தான் என்னுடைய பணி அமையும். இன்றைக்கு கூட கொரோனா வார்டுக்குச் சென்று அங்கு இருக்கும் நிலை என்ன என்று ஆய்வு செய்தேன். எதற்காக?

அந்தப் பணியில் ஈடுபட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க மருத்துவர்கள் செவிலியர்கள் தன்உயிரைப் பணையம் வைத்து பணியாற்றிவருகின்றார்கள். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும், உற்சாகப்படுத்த வேண்டும், நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். அவர்களைவிட அவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் படும் கவலைகளை போக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றேன். இப்போதும் சொல்கிறேன் கோவைக்கு இரண்டு முறை மட்டுமல்ல, தேவைப்பட்டால் இரண்டு நாள் கழித்துக்கூட மீண்டும் ஒருமுறை வருவேன். அதனால் கோவை புறக்கணிக்கபடுவது என்பது அல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டைப் பாதுகாப்பதுதான் எங்களின் முதல் பணி ஆகும்.

பிளீச்சிங் பவுடர் - அனைத்து இடங்களிலும் போடக்கூடாது

செய்தியாளர்:- கிருமி நாசினி தெளிப்பது போன்ற பணிகள் நடைபெறவில்லையே?

அமைச்சர் மா.சுப்பிரமணியன் : கிருமி நாசினி தெளிப்பது, சுண்ணாம்பு போடுவது, பீளீச்சிங் பவுடர் போடுவது கூடாது என்று உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளன. அதனால் தொற்றைக் குறைத்துவிட முடியாது என்றும் கூறியிருக்கின்றனர். இது மூச்சுக்காற்றில் பரவும் ஒரு கிருமியாகும். கோவை மாநகராட்சியினை பொறுத்தவரையில் அதிகமாக துர்நாற்றம் ஏற்படும் இடங்களில் பீளிச்சிங்க் பவுடர்கள் போடலாம், எல்லா இடங்களிலும் போடுவது என்பது மனித சுகவீனத்திற்கு ஒரு காரணமாகவிடும் என்று சொல்லியிருக்கின்றார்கள். அதனால் மருத்துவத்துறையின் அறிவுரை பீளீச்சிங்க் பவுடர் அனைத்து இடங்களிலும் போடக்கூடாது என்பது.

செய்தியாளர் : முழுமையான ஊரடங்காக இல்லை என்றும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது என்றும் விமர்சனம் உள்ளதே?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: இந்த ஊரடங்கு முழுமையாக ஊரடங்கு இல்லை என்று குறைகள் சொல்கின்றார்கள். ரொம்ப கடுமையாக இருந்தால் கடுமையாக ஊரடங்கு அமல்படுத்தப்படுகின்றன என்று சொல்கின்றனர். காய்கறிகள் கிடைக்கவில்லை, மளிகைப் பொருட்கள் கிடைக்கவில்லை என்று சொல்வார்கள். அதுமட்டுமல்ல இது தான்தோன்றித்தனமாக நாங்கள் மட்டும் எடுத்த முடிவல்ல. இதே நாங்கள் எதிர்கட்சியாக இருந்தபோது, அனைத்துக்கட்சிக் கூட்டத்தினைக் கூட்டுங்கள் என்றோம், அதற்கு நீங்கள் என்ன டாக்டர்களா என்று கூறினார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறு கேட்கவில்லை.

நாங்கள்அனைத்துக்கட்சி குழு அமைத்து அவர்களிடம் ஆலோசனை செய்து ஒரு வாரம் இல்லை, இரண்டு வாரம் ஊரடங்கு போடுங்கள் என்று கூறியதன் பேரில் ஊரடங்கு போடப்பட்டது. ஊரடங்கு போடும்போது எந்தவிதமான சலுகைகள் வழங்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ஊரடங்கு போடப்பட்டது.

மேகதாது அணையை அனுமதிக்க மாட்டோம்

செய்தியாளர்:- மேகதாது அணை கட்டுவதைத் தடுப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் ஏற்கனவே இதுதொடர்பாக பதிலளித்துள்ளார். எந்தக்காரணம் கொண்டும் அதை அனுமதிக்க மாட்டோம் என்றும்பதிலளித்துள்ளார்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

banner

Related Stories

Related Stories