மு.க.ஸ்டாலின்

“யானைக்கு தீ வைத்துக் கொன்ற மனித மிருகங்களை விரைந்து தண்டித்திட வேண்டும்” : மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

“யானைக்கு தீ வைத்த மனித மிருகங்களை சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டித்திட வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

“யானைக்கு தீ வைத்துக் கொன்ற மனித மிருகங்களை விரைந்து தண்டித்திட வேண்டும்” : மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“யானைக்கு தீ வைத்த மனித மிருகங்களை சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டித்திட வேண்டும்.” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் கடந்த சில மாதங்களாக சுமார் 40 வயதான ஆண் காட்டு யானை முதுகில் பலத்த காயத்துடன் சுற்றி வந்தது. அதற்கு வனத்துறையினர் பழங்களுக்குள் மாத்திரைகளை மறைத்து வைத்து தொடர்ந்து வழங்கி வந்தனர்.

அந்த யானையின் இடது பக்க காதில் பலத்த தீக்காயம் இருப்பதும், காதின் ஒரு பகுதி துண்டாகி கீழே விழுந்ததும் கண்டறியப்பட்டு, யானைக்கு சிகிச்சையளிப்பதற்காக லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றனர

ஆனால் செல்லும் வழியிலேயே அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. இந்நிலையில் அந்த யானைக்கு சிலர் தீ வைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் கசிந்தது. மசினகுடி மாவனல்லா பகுதியில் உள்ள ரிசார்ட் அருகே யானை வந்தபோது சிலர் பழைய டயர்களுக்கு தீ வைத்து யானை மீது வீசியுள்ளனர். அதில் தான் அந்த யானைக்கு காதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

யானையை சிலர் கொடுமைப்படுத்தி, உயிர்பலிக்குக் காரணமான விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது. இதுதொடர்பாக சிங்காரா வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து, இன்று தி.மு.க தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:

“காட்டில் வாழ்பவற்றை மிருகங்கள் என்கிறோம். ஆனால் நாட்டில் நடமாடுவோரே மிருகங்கள் என நினைக்கும் அளவுக்கு, நீலகிரியில் யானையை தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.

யானை என்பது ஒற்றை உயிரினமன்று; காட்டிலும் நாட்டிலும் பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாத்துப் பெருக்குகின்ற இயற்கைத் தோழன்!

அதன் அருமை அறியாது, மனிதத்தன்மையற்ற வகையில் தீ வைத்தோரையும் இத்தகைய வன்செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் மனித மிருகங்களையும், சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டித்திட வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories