மு.க.ஸ்டாலின்

ஏற்றத்தாழ்வுகள் உள்ளவரை, பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நித்தமும் நினைவு கூரப்படுவார்! -மு.க.ஸ்டாலின்

சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் திருவுருவச்சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஏற்றத்தாழ்வுகள் உள்ளவரை, பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நித்தமும் நினைவு கூரப்படுவார்! -மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தந்தை பெரியாரின் 47 வது நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 47வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் திருவுருவச்சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திமுக செய்தி தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ் இளங்கோவன் , துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, தென்சென்னை மாவட்டச் செயலாளர் மா. சுப்பிரமணியம் , சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளர் சுதர்சனம், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ப.ரங்கநாதன், தாயகம் கவி , கே.எஸ் ரவிச்சந்திரன், சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளும் தந்தை பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் “ சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் தந்தை பெரியாரின் 47வது நினைவு நாள்!

சமூக அடிமைத்தனம் - ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை - பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நித்தமும் நினைவு கூரப்படுவார்! #Periyar ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம்!” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories