மு.க.ஸ்டாலின்

அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை பொருட்படுத்தாமல் இடஒதுக்கீட்டை நிராகரிப்பதா? -மு.க.ஸ்டாலின் கண்டனம்

சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் உடன்பாடில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை பொருட்படுத்தாமல் இடஒதுக்கீட்டை நிராகரிப்பதா? -மு.க.ஸ்டாலின் கண்டனம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்க உத்தரவிடக் கோரி அரசு மருத்துவர்கள் எம்.செய்யது பக்ரூதீன், ஜி.குமரவேல் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ முதுநிலை மற்றும் டிப்ளமோ சிறப்பு படிப்புகளில் உரிய இடஒதுக்கீடு அளிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளதால், இந்த படிப்புகளுக்கு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை பொருட்படுத்தாமல் இடஒதுக்கீட்டை நிராகரிப்பதா? -மு.க.ஸ்டாலின் கண்டனம்

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இந்த படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், எவ்வளவு இடங்களை நிரப்ப வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு இடம் ஒதுக்குவதில் மத்திய அரசுக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் மத்திய - மாநில அரசுகள் வெவ்வேறான நிலைபாட்டை எடுத்துள்ளதால், மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையையும் பொருட்படுத்தாமல், முதுகலை சிறப்பு படிப்புகளில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக இருக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மத்திய அரசின் திணிப்புகளுக்கு எதிராக நின்று, மாநிலத்தின் அதிகாரத்தையும் தன்னாட்சியையும் தமிழக முதலமைச்சர் பாதுகாக்க வேண்டும்.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories