மு.க.ஸ்டாலின்

“மருத்துவர்களையே காக்காத அ.தி.மு.க அரசு மக்களை எப்படி காக்கும்?” - மு.க.ஸ்டாலின் முன்வைக்கும் கேள்விகள்!

“மருத்துவர்களையே காக்க முடியாத அரசு மக்களை எப்படிக் காக்கும்?” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

“மருத்துவர்களையே காக்காத அ.தி.மு.க அரசு மக்களை எப்படி காக்கும்?” - மு.க.ஸ்டாலின் முன்வைக்கும் கேள்விகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவ பணியாளர்களுக்கான PPE போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் அரசு கொடுக்காமல் இருப்பதால், வைரஸ் தொற்றில் இருந்து காத்துக்கொள்ள வேறு வழியில்லாமல், மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் பலர் பிளாஸ்டிக் கவர்கள், ரெயின் கோட்கள் போன்றவற்றை பயன்படுத்தியே பணியாற்றி வருகின்றனர்.

அதனால், மருத்துவர்களை பாதுக்காக்கக் கோரி, மத்திய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி இந்தியா முழுவதும் மருத்துவர்களின் சார்பில் இன்று இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டம் நடத்தப்போவதாகவும் சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்திருந்தனர்.

மருத்துவர்களின் போராட்ட அறிவிப்பால் அதிர்ந்தது மோடி அரசு. உடனே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ சங்கத்துடன் உரையாடினர். அதேபோல் தமிழகத்தில் எடப்பாடியும் மருத்துவர்களிடம் உரையாடினர்.

இதனையடுத்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய இந்திய மருத்துவ சங்கம் நாளை அறிவித்திருந்த கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் போராட்டத்தை வாபஸ் பெற்றது.

இந்நிலையில், மருத்துவர்களின் மீது அக்கறை செலுத்தாத அ.தி.மு.க அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

அதில், “சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி விடுதியில் உள்ள மருத்துவ மாணவர்கள் ஆகியோருக்குப் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், உணவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் சரியான முறையில் வழங்கப்படவில்லை என்றும் கூறி இன்று காலையில் போராட்டம் நடத்திய செய்தி கொரோனாவை விடக் கொடூரமானது.

மக்களைக் காக்கும் மருத்துவர்களுக்குக் கூட போதிய வசதி செய்துதர முடியாத அரசாங்கமா இது? இது மக்களைக் காக்கும் அரசா?

அரசியல் செய்யத் தினமும் பேட்டி கொடுத்தால் போதுமா? - பொய்களைச் சொன்னால் போதுமா? தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையையும், மரணம் அடைந்தோர் எண்ணிக்கையையும் வாசித்தால் போதுமா?

சில ஆயிரம் மருத்துவர்களையே முறையாகக் கவனிக்க முடியாத இவர்கள், பல லட்சம் மக்களை எப்படிக் காப்பாற்றப் போகிறார்கள் என்று நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. கொஞ்சமும் பொறுப்பு இல்லாத மனிதர்கள் கையில் ஆட்சி சிக்கி இருக்கிறது!

சென்னை போன்ற பெருநகரில் உள்ள பொது மருத்துவமனையிலேயே இந்த நிலைமை என்றால், மற்ற மருத்துவமனைகள் பற்றிச் சொல்லத் தேவையில்லை! தமிழக சுகாதாரத்துறையின் சுவாசக்குழாய் அடைப்பை யார் அகற்றிச் சரி செய்வது? என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories