மு.க.ஸ்டாலின்

“CAA-வுக்கு எதிராக தமிழகத்தில் மாபெரும் கையெழுத்து இயக்கம்” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தவிருப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

“CAA-வுக்கு எதிராக தமிழகத்தில் மாபெரும் கையெழுத்து இயக்கம்” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பா.ஜ.க அரசு சமீபத்தில் கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தி.மு.க கூட்டணி கட்சிகளின் சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்று முடிந்த தி.மு.க தலைமை செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டபடி, குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

பல்வேறு கட்சியினரும் கலந்துகொண்ட இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

“CAA-வுக்கு எதிராக தமிழகத்தில் மாபெரும் கையெழுத்து இயக்கம்” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :

“மதச்சார்பற்ற முற்போக்குக் கட்சிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து குடிமக்களையும் பாதிக்கக்கூடிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்.

தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது எனக் கூறி இந்தத் தீர்மானங்களை தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் நிறைவேற்றியுள்ளன.

அதற்காக தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மக்களைச் சந்தித்து மாபெரும் கையெழுத்து இயக்கத்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கையெழுத்து இயக்கத்தை வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி முதல் வரை நடத்தி, பொதுமக்களுடைய கையெழுத்துகளைப் பெற்று இந்திய குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வழங்க முடிவு செய்திருக்கிறோம்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும், ஒன்றியங்களிலும், கிளைகளிலும், ஊராட்சி பகுதிகளிலும், மதச்சார்பற்ற கூட்டணியில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் இந்தப் பணியில் ஈடுபட உள்ளனர். இந்த முயற்சிக்கு கட்சி சார்பற்ற பொதுமக்கள், வணிகர்கள், மாணவர்கள் த்தனை பேரும் ஆதரவு தர வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

“CAA-வுக்கு எதிராக தமிழகத்தில் மாபெரும் கையெழுத்து இயக்கம்” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மதுராந்தகம் அருகே தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “95 ஆண்டுகாலம் தமிழகத்திற்காக குரல் கொடுத்த, போராடிய தந்தை பெரியாரை இழிவு படுத்துவதென்பது வேதனைக்குரிய ஒன்று. அந்தச் செயலில் ஈடுபட்டோர் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்றார்.

மேலும் பேசிய அவர், “நீட் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டும் அதற்கான எந்த பதிலும் வரவில்லை. தற்போது நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க வழக்குப் போட்டுள்ளது, தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பது போல் உள்ளது. அடிமை ஆட்சி நடைபெறுவதால் மத்திய அரசு துணிந்து செயல்படுகிறது.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories