மு.க.ஸ்டாலின்

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு இல்லை என்ற கோத்தபய ராஜபக்சவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் !

இலங்கையில் உள்ள மக்கள் அனைவரும் சமம் எனக் கூறிய கோத்தபய ராஜபக்ச, மோடியை சந்தித்த பிறகு அளித்த பேட்டி அதிர்ச்சி அளிக்கிறது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு இல்லை என்ற கோத்தபய ராஜபக்சவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு செய்வது எனது முன்னுரிமை இல்லை என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பதிவில், “ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு செய்வது எனது முன்னுரிமை இல்லை என்றும், பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்திற்கு எதிராக, ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க இயவில்லை என்றும் The Hindu ஆங்கில பத்திரிகைக்கு பேட்டி அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இலங்கையில் வாழும் மக்கள் அனைவரையும் சமமாக கருதுகிறேன் எனக் கூறிய இலங்கை அதிபர், இந்திய பிரதமர் மோடியை சந்தித்த பிறகு இவ்வாறு பேட்டியளித்திருப்பது மிகவும் கவலையளிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்”

“பெரும்பான்மை, சிறுபான்மை என பிளவுபடுத்தி பிரித்து பேசுவது அவர் மனதை எது ஆட்கொண்டுள்ளது என்பதற்கான அறிகுறியே தவிர, ஜனநாயகத்தை போற்றுவதாகது” என குறிப்பிட்டுள்ளார்.

“இவ்விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட்டு, இலங்கையில் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு கிடைத்து அவர்கள் கண்ணியத்துடனும், சுய மரியாதையுடனும் வாழ்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories