மு.க.ஸ்டாலின்

பஞ்சமி நில விவகாரம் : “நிரூபிக்கத் தவறினால், ராமதாஸ் அரசியலை விட்டு விலகத் தயாரா?” - மு.க.ஸ்டாலின் சவால்!

முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் எனத் தெரிவித்த ராமதாசுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பஞ்சமி நில விவகாரம் : “நிரூபிக்கத் தவறினால், ராமதாஸ் அரசியலை விட்டு விலகத் தயாரா?” - மு.க.ஸ்டாலின் சவால்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள அசுரன் படத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் உள்ள பாலகிருஷ்ணா தியேட்டரில் கண்டு ரசித்தார்.

இதனையடுத்து, படம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், “அசுரன் படம் மட்டும் அல்ல, பாடம் என்று குறிப்பிட்ட அவர், பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் அசுரன்” என்றும் “கதை, களம், வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும், வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள்” எனப் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த “அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்” என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உண்மைக்குப் புறம்பான தகவலைக் கூறி பரபரப்பைக் கிளப்ப முயன்றார்.

இந்நிலையில், முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் என தெரிவித்த ராமதாசுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், ''மருத்துவர் ராமதாஸ், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.! அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை!

நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?'' என சவால் விடுத்துள்ளார். மேலும், அந்தப் பதிவில் பட்டாவின் நகலையும் இணைத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories