மு.க.ஸ்டாலின்

“தேனியில் அல்வா கொடுத்து வெற்றி பெற்றதா அ.தி.மு.க ?”- எடப்பாடிக்கு மு.க ஸ்டாலின் கேள்வி!

தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது என தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

“தேனியில் அல்வா கொடுத்து வெற்றி பெற்றதா அ.தி.மு.க ?”- எடப்பாடிக்கு மு.க ஸ்டாலின் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆண்டிப்பட்டி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அ.ம.மு.க.,வின் கொள்கை பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்தவருமான தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியில் இருந்து விலகி கடந்த ஜூன் 28ம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.

தங்க தமிழ்ச்செல்வன் மட்டுமல்லாது, அவரது ஆதரவாளர்களும் தி.மு.கவில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து தேனியில் மாற்றுக்கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இன்று வீரபாண்டியில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினர். அப்போது அவர் பேசியதாவது, “தங்க தமிழ்செல்வன் எல்லோரையும் அரவணைத்து ஒற்றுமையுடன் செயல்படுகிறார். சென்னையில் இருக்கும் அண்ணா அறிவாலயத்தில் தங்க தமிழ்ச்செல்வன் இணைந்தது போல தேனியில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் பல்லாயிரக்கணக்கோர் தி.மு.க.,வில் இணைந்துள்ளார்கள். உங்களை தி.மு.க சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளும். அ.தி.மு.க-வை உருவாக்கிய எம்.ஜி.ஆர் அவர்களும் இருந்த இயக்கம் தான் தி.மு.க.” என்றார்.

“தேனியில் அல்வா கொடுத்து வெற்றி பெற்றதா அ.தி.மு.க ?”- எடப்பாடிக்கு மு.க ஸ்டாலின் கேள்வி!

நான்கு நாட்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் டாக்டர் சரவணன் அவரது கன்னிப் பேச்சை ஆற்றினார். அவர் பேசும்போது, கலைஞர் அவர்களுக்கு நன்றி கூறினார். அப்போது அமைதியாக இருந்த அ.தி.மு.க-வினரை பார்த்து கலைஞர் தி.மு.க.,விற்கு மட்டும் தலைவராக இருந்தவர் அல்ல; உங்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கே தலைவராக இருந்தவர் எனப் பெருமையுடன் கூறியதைக் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், “தமிழ் மொழிக்கு எந்த சூழ்நிலையிலும் ஆபத்து வந்துவிடக்கூடாது என்று தனது 14வது வயதில், சக மாணவர்களுடன் போராடியவர் தலைவர் கலைஞர். தமிழ் மொழிக்கு எந்த நிலையிலும் ஆபத்து வந்துவிடக்கூடாது. ஆனால் அந்த சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.

தற்போது உள்ள அ.தி.மு.க எம்.ஜி.ஆர் உருவாக்கியதா? அப்படி அவர் உருவாக்கிய அ.தி.மு.க.,வாக இருந்தால் தங்க தமிழ்செல்வன் இங்கே வந்து இணையவேண்டிய தேவை இருக்காது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை அ.தி.மு.கவில் உள்ள அமைச்சர்கள் தங்கள் சுயலாபத்திற்காக நடத்தியுள்ளனர். மேலும் பல கோடி அளவில் மக்கள் பணத்தை வீணடித்துள்ளனர்.

பதவி பறிபோனதால் தான் ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளது என ஒரு பிரச்னையை ஓ.பி.எஸ் கிளப்பினார். அதனால் தான் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால் அவர் ஒரு முறைகூட விசாரணை கமிஷனில் ஆஜராகவில்லை” எனக் குற்றம் சாட்டினார் மு.க.ஸ்டாலின்.

“தேனியில் அல்வா கொடுத்து வெற்றி பெற்றதா அ.தி.மு.க ?”- எடப்பாடிக்கு மு.க ஸ்டாலின் கேள்வி!

“மோடியும், அமித்ஷாவையும் தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள் தலைமையில் இன்று ஆட்சி நடைபெறுகிறது. மோடி, அமித்ஷாவுக்கு அண்ணாவையோ, எம்.ஜி.ஆர் அவர்களையோ தெரியுமா? பணத்திற்காக, அதிகாரத்திற்காக இவர்கள் கூனிக்குறுகி பா.ஜ.க பக்கம் நிற்கிறார்கள்.

அதுமட்டுமின்றி தி.மு.க மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முதல்வர் முன்வைத்துப் பேசி வருகிறார். தி.மு.க வெற்றி பெற்ற தொகுதிகளில் பொய்யான மிட்டாய் கொடுத்துள்ளது என முதல்வர் பேசுகிறார். அப்படியென்றால் அ.தி.மு.க வெற்றி பெற்ற ஒரு தொகுதியில் நீங்கள் அல்வா கொடுத்து வெற்றி அடைந்தீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார் மு.க.ஸ்டாலின்.

“அடுத்த தேர்தலில் 200 இடங்களிலும் தி.மு.க தான் வெற்றி பெறும், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை கலைஞர் வழிநின்று செயல்படுத்திக் காட்டுவோம்” எனவும் அவர் தெரிவித்தார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் பேச்சைக் கேட்டு அங்கிருந்த பல்லாயிரக்கணக்கானோர் ஆரவாரம் செய்தனர்.

banner

Related Stories

Related Stories