மு.க.ஸ்டாலின்

தோற்றாலும் வென்றாலும் மக்களுக்காக செயல்படும் இயக்கம் தி.மு.க. - மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

தேர்தலில் தோற்றாலும், வெற்றி பெற்றாலும் என்றும் மக்களுடனும் மக்களுக்காகவும் திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தோற்றாலும் வென்றாலும்  மக்களுக்காக செயல்படும் இயக்கம் தி.மு.க. - மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும், சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.கவும் அமோக வெற்றியை பெற்றது.

இடைத்தேர்தலில் நூலிழையில், ஆட்சியமைக்கும் வாய்ப்பு தி.மு.கவுக்கு கிடைக்காமல் இருந்தாலும் சட்டமன்றத்தில் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது தி.மு.க. மேலும், தமிழகம், புதுச்சேரி உட்பட 38 மக்களவைத் தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்று நாட்டிலேயே மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தத்தையும் தி.மு.க. பெற்றுள்ளது.

தோற்றாலும் வென்றாலும்  மக்களுக்காக செயல்படும் இயக்கம் தி.மு.க. - மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

இதனையடுத்து, தேர்தலில் வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

அந்த வகையில், கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குட்பட்ட அப்பநாயக்கன்பட்டி, கலங்கல், செலக்கரசல், பட்டணம் புதூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வாக்காளர்களை சந்தித்து நேற்று நன்றி தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டார். அவருடன், தி.மு.க. வேட்பாளராக களமிறக்கப்பட்ட பொங்கலூர் பழனிசாமியும், நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினரும் உடன் இருந்தனர்.

தோற்றாலும் வென்றாலும்  மக்களுக்காக செயல்படும் இயக்கம் தி.மு.க. - மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

அப்போது மக்களிடையே பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ”தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் என்றும் உங்கள் பக்கமே (மக்களுடன்) இருப்போம். வெகு விரைவில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.கவுக்கு ஆதரவளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ”கலைஞரின் ஆட்சியின் போது தமிழகத்துக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை போக்காமல் அ.தி.மு.க அரசு அலட்சியம் காட்டி வருகிறது.

தோற்றாலும் வென்றாலும்  மக்களுக்காக செயல்படும் இயக்கம் தி.மு.க. - மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

மக்களை காக்காமல் மக்கள் நலனில் ஈடுபடாமல் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதிலேயே முனைப்புடன் உள்ளது அ.தி.மு.க. அரசு.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் தங்களால் ஜெயிக்க முடியாது என தெரிந்ததனாலேயே இழுத்தடித்து வருகிறது அ.தி.மு.க. நீதிமன்றத்தின் மூலம் முறையிடப்பட்டதால் கூடிய விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது” எனவும் மக்களிடையே பேசினார்.

”மேலும், வாக்களித்தவர்கள், வாக்களிக்காததவர்கள் என்ற எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் மக்களின் நலனுக்காகவும், அடிப்படை தேவைக்காகவும் அரசுடன் தி.மு.கழகம் போராடும்” என மக்கள் முன்னிலையில் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories