மு.க.ஸ்டாலின்

சாதகமோ பாதகமோ கருத்துக் கணிப்புகளில் நம்பிக்கை இல்லை - மு.க.ஸ்டாலின் பேட்டி

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மீது நம்பிக்கை இல்லை. மக்களின் கணிப்பு மே 23-ல் தெரியவரும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

சாதகமோ பாதகமோ கருத்துக் கணிப்புகளில் நம்பிக்கை இல்லை - மு.க.ஸ்டாலின் பேட்டி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மக்களவைத் தேர்தலுக்கான கடைசிகட்ட வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அதனையொட்டி, மாலை 6.30க்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானது.

இதில், பெரும்பாலான ஊடகங்கள் பாஜகவுக்கு ஆதரவாகவே கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்துக்கணிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தி.மு.க.வுக்கு சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் அதனை நாங்கள் பொருட்படுத்தப் போவதில்லை. மக்களின் கணிப்பு என்ன என்பதை இன்னும் மூன்று நாட்களில் தெரிந்துக்கொள்ளலாம். அதை மட்டுமே நாங்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்” என்றார் மு.க.ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories