
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் பீகாரில் பா.ஜ.க கூட்டணி ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளது. இந்த கூட்டணி ஆட்சியில் நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். ஆனால் பல முக்கிய அமைச்சர் பதவிகளை பா.ஜ.கவினர் கைப்பற்றியுள்ளனர். அதிலும் குறிப்பாக உள்துறை பொறுப்பை பா.ஜ.க பெற்றுள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் நடக்கும் புல்டோசர் தாக்குதலை பீகாரில் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள் துவங்கியுள்ளது பா.ஜ.க கூட்டணி.
சமஸ்திபூர் மாவட்டத்தில் சட்ட விரோத ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இஸ்லாமியர்கள் மற்றும் ஏழைகளின் வீடுகளையும் கடைகளையும் புல்டோசர்கள் மூலம் அகற்றப்பட்டுள்ளது. அதேபோல் லக்கிசராய் நகரிலும் குடிசை வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வீடுகளை இழந்த இஸ்லாமியர்களும் மக்களும் பா.ஜ.க கூட்டணி அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இவர்களை காவல்துறை கொண்டு அம்மாநில அரசு ஒடிக்கி வருகிறது.








