இந்தியா

”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!

பீகாரில் பா.ஜ.கவுக்கு வாக்களிக்காதவர்கள் வெளியே நடமாட முடியாது” என வாக்காளர்களை ஒன்றிய அமைச்சர் மிரட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும், முதலமைச்சராக தேஜஸ்வி வருவார் எனவும் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகிறது. இதனால் NDA கூட்டணி தலைவர்கள் பிரதமர் மோடி, நிதிஷ்குமார், அமித்ஷா ஆகியோர் தோல்வி பயத்தில் இருக்கிறார்கள்.

மேலும் NDA கூட்டணி வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் பொதுமக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். 20 ஆண்டுகளாக நிதிஷ்குமார் முதலமைச்சராக இருந்துள்ளார். இதனால் எங்களுக்கு என்ன கிடைத்தது?, எங்களுக்கு வேலையும் கிடைக்கவில்லை. எந்த அடிப்படை வசதியும் இல்லை என மக்கள் குற்றச்சாட்டுகனை வைத்து வருகிறார்கள். பா.ஜ.க கூட்டணிக்கு எங்கள் வாக்குகளை செலுத்த மாட்டோம் என துணிச்சலுடன், வாக்கு கேட்டு செல்லும் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களிடமே தெரிவித்து வருகிறார்கள்.

இதனால் NDA கூட்டணி தோல்வி பயத்தில் இருந்து வருகிறது. இதன் வெளிப்பாடாகத்தான் ஒன்றிய அமைச்சர் லாலன் சிங்கின் பேச்சு அமைந்துள்ளது. பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஒன்றிய அமைச்சர் லாலன் சிங், ”பீகாரில் பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள் தேர்தல் நாளில் நடமாட முடியாது” என வாக்காளர்களை மிரட்டியுள்ளார்.

இவரின் இந்த மிரட்டல் பேச்சு, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதை அடுத்து பீகார் மக்களுக்கு மிரட்டல் விடுத்த ஒன்றிய அமைச்சர் லாலன் சிங், 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

banner

Related Stories

Related Stories