இந்தியா

தொடர்ந்து பெய்து வரும் கனமழை : ஒரே நொடியில் சரிந்து விழுந்த 6 மாடிக் கட்டிடம்.. பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை : ஒரே நொடியில் சரிந்து விழுந்த 6 மாடிக் கட்டிடம்.. பலி எண்ணிக்கை அதிகரிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் பாலம், கட்டடம் உள்ளிட்டவை சேதம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது குஜராத்தில் 6 ஆண்டுகளான கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி என்ற கிராமம் உள்ளது. இங்கு 6 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டடத்தில் பல நூறு பேர் வசித்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நேற்று (ஜூலை 6) அந்த 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை : ஒரே நொடியில் சரிந்து விழுந்த 6 மாடிக் கட்டிடம்.. பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசாரும் இதுகுறித்து விசாரித்தனர். அப்போது 30 வீடுகள் கொண்ட அந்த கட்டடத்தில், விபத்து நேர்ந்த அந்த சமயத்தில் 4 - 5 கட்டடத்தில் மட்டுமே ஆட்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து 15-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்ட நிலையில், 3 பேரின் சடலங்கள் உடனே மீட்கப்பட்டது.

மேலும் இடர்பாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோர சம்பவத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வு குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories