இந்தியா

குளத்தில் குளிக்கச் சென்ற 4 சிறுவர்கள் : வீட்டில் இருந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கர்நாடகாவில் குளிக்கச் சென்ற 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குளத்தில் குளிக்கச் சென்ற  4 சிறுவர்கள் : வீட்டில் இருந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகா மாநிலம், திம்மனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் ஜீவன் (13), சாத்விக் (11), விஷ்வா (12), பிருத்வி (12) ஆகியோர் பள்ளி விடுமுறை என்பதால் குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது குளித்துக் கொண்டிருந்த நான்கு சிறுவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர். இதை கரையில் இருந்துபார்த்த ஒரு சிறுவன் அருகே இருந்த பொதுமக்களிடம் கூறியுள்ளார்.

பின்னர் இது குறித்து கிராம மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த போலிஸார் குளத்தில் மூழ்கிய 4 சிறுவர்களையும் சடலமாக மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி விடுமுறையில் குளத்தில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories