இந்தியா

”மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதையே பாஜக விரும்புகிறது” : நிர்மலா சீதாராமன் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்!

மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதையே பா.ஜ.க விரும்புகிறது என நிர்மலா சீதாராமன் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

”மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதையே பாஜக விரும்புகிறது” : நிர்மலா சீதாராமன் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2018ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு தேர்தல் நன்கொடை பத்திர திட்டத்தை கொண்டு வந்தது. பல்வேறு நிறுவனங்களை விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்திய பாஜக, தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் ரூ.8 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை குவித்தது அம்பலமானது.

இதனிடையே, வெளிப்படைத்தன்மை இல்லாத இந்தத் திட்டம், கருப்பு பணத்தை அதிகரிக்கச் செய்யும் எனக் கூறி உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் பல்வேறு நிறுவனங்களை மிரட்டி பா.ஜ.க எப்படி எல்லாம் நிதி பெற்றது என்ற விவரங்களும் வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஒன்றிய பா.ஜ.க அரசின் மிகப்பெரிய ஊழல் தேர்தல் பத்திரம் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மேலும் PM Cares நிதி குறித்து வெளிப்படை தன்மையுடன் அறிவிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திர திட்டம் அமல்படுத்தப்படும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதையே பா.ஜ.க விரும்புகிறது என நிர்மலா சீதாராமன் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்துகாங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூகவலைதளத்தில் பதிவில், " மக்களின் வரிப்பணத்தில் ரூ.4 லட்சம் கோடியை பா.ஜ.க கொள்ளையடித்துள்ளது. அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை மீண்டும் கொண்டுருவோம் என பா.ஜ.க கூறுகிறது. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதையே பா.ஜ.க இப்போதும் விரும்புகிறது. பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இன்னும் எத்தனை கோடி கொள்ளையடிப்பார்கள் என்பதை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும் " என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories