இந்தியா

பெயர் சர்ச்சை விவகாரம் : அக்பர் - சீதா சிங்கங்களின் பெயர்களை மாற்றிய மேற்கு வங்க அரசு !

பெயர் சர்ச்சை விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து அக்பர் - சீதா சிங்கங்களின் பெயர்களை மேற்கு வங்க அரசு மாற்றியுள்ளது.

பெயர் சர்ச்சை விவகாரம் : அக்பர் - சீதா சிங்கங்களின் பெயர்களை மாற்றிய மேற்கு வங்க அரசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மேற்கு வங்கத்தின் சிலிகுரி சஃபாரி பூங்காவுக்கு திரிபுராவில் இருந்து அக்பர் என்ற ஆண் சிங்கமும், சீதா என்ற பெண் சிங்கமும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்டன. அக்பர் - சீதா என்று இரு வெவ்வேறு மதங்கள் பெயர்களை கொண்ட சிங்கங்கள் ஒரே கூண்டில் அடைத்து வைக்கப்பட்டதையடுத்து, இந்த நிகழ்வுக்கு இந்துத்துவ அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், "அக்பர் புகழ்பெற்ற முகலாய பேரரசர்களில் ஒருவர். சீதா ராமாயணத்தில் ஒரு பாத்திரம். இந்து மத வழக்கங்களில் சீதை தெய்வமாக கொண்டாடப்படுகிறார். இந்த சூழலில், இந்த பெயர் கொண்ட இரு சிங்கங்களை ஒரே இடத்தில் வைப்பது இந்துக்களின் மனதை வனத்துறை புண்படுத்திவிட்டது. எனவே அவற்றை வேறு வேறு இடங்களில் வைக்கவேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

பெயர் சர்ச்சை விவகாரம் : அக்பர் - சீதா சிங்கங்களின் பெயர்களை மாற்றிய மேற்கு வங்க அரசு !

இந்த வழக்கு தள்ளுபடியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்றது. அப்போது சிங்கங்கள் பெயர்கள் குறித்து விசாரிக்கப்பட்டது. அந்த சமயத்தில் திரிபுராவில் இருந்து சிங்கங்கள் கொண்டு வரும்போதே அந்த பெயர்கள் இருந்ததாக மேற்கு வங்க அரசு வாதிட்டது.

இதையடுத்து "பொதுமக்கள் வணக்கத்திற்கு உரியவர்களாக கருதும் யாருடைய பெயரையும் எந்த ஒரு விலங்குக்கும் வைக்கக்கூடாது. உங்கள் செல்லப் பிராணிக்கு ஏதேனும் இந்து தெய்வம் அல்லது முஸ்லிம் தீர்க்கதரிசியின் பெயரை வைப்பீர்களா?"என நீதிபதி கேள்வியெழுப்பினார்.

பெயர் சர்ச்சை விவகாரம் : அக்பர் - சீதா சிங்கங்களின் பெயர்களை மாற்றிய மேற்கு வங்க அரசு !

அதனைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட விலங்குகளுக்கு வேறு பெயர் வைக்குமாறு கூறி நீதிபதி தீர்ப்பளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிங்கங்களுக்கு அக்பர்-சீதா என பெயர் வைத்த திரிபுரா மாநில முதன்மை வன அதிகாரி பிரபின் லால் அகர்வாலை திரிபுரா பாஜக அரசு சஸ்பெண்ட் செய்தது கண்டனங்களை எழுப்பியது.

இந்த நிலையில் தற்போது அந்த சிங்கங்களுக்கு பெயரை மாற்றியுள்ளது மேற்கு வங்க அரசு. கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஆண் சிங்கத்திற்கு 'சூரஜ்' என்றும், சீதா பெண் என்ற சிங்கத்திற்கு 'தனாயா' என்றும் மேற்கு வங்க அரசு பெயர்களை மாற்றியுள்ளது.

banner

Related Stories

Related Stories