இந்தியா

"நாங்கள் குருடர்கள் அல்ல" - பதஞ்சலி நிறுவனத்தை விமர்சித்த உச்சநீதிமன்றம்... சிக்கலில் பாபா ராம்தேவ் !

"நாங்கள் குருடர்கள் அல்ல" -  பதஞ்சலி நிறுவனத்தை விமர்சித்த உச்சநீதிமன்றம்... சிக்கலில் பாபா ராம்தேவ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாஜக ஆதரவாளரான யோகா சாமியார் ராம்தேவ், பதஞ்சலி எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தை பாஜக மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் அதிகளவில் விளம்பரப்படுத்தி வருகின்றனர். கொரோனா அலையின் போது உலகமே தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இயங்கி வந்த வேளையில், கொரோனா வைரஸை எதிர்க்கும் எனக் கூறி CORONIL என்ற ஒரு மருந்தை அறிமுகம் செய்தார் ராம்தேவ். பின்னர் அவை கொரோனாவை எதிர்க்காது என மருத்துவ துறை அறிஞர்கள் அறிவித்தனர்.

அதோடு மட்டுமின்றி அலோபதி மருத்துவத்துக்கு எதிரான பல்வேறு பொய்யான விளம்பரங்களையும் பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டு பரப்பி வந்தது. அதில் பல தவறான கருத்துக்களும், அலோபதி மருத்துவத்துக்கு எதிரான கருத்துக்களும் இருந்தது. இதனால் பொதுமக்களிடையே தவறான கருத்துகள் பரவியது.

இதனைத் தொடர்ந்து அலோபதி மருத்துவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் இதுபோன்ற விளம்பரங்கள் இனி ஒளிபரப்பக்கூடாது என பதாஞ்சலி நிறுவனத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் தொடர்ந்து அதுபோன்ற விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் இனி, இதுபோன்ற விளம்பரங்கள் இனி ஒளிபரப்பப்படாது அதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் பதாஞ்சலி நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நிறுவனம் நிபந்தனையற்ற மன்னிப்பையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

"நாங்கள் குருடர்கள் அல்ல" -  பதஞ்சலி நிறுவனத்தை விமர்சித்த உச்சநீதிமன்றம்... சிக்கலில் பாபா ராம்தேவ் !

ஆனால், தொடர்ந்து அதுபோன்ற விளம்பரங்கள் ஒளிபரப்பாகின. இதனை கடுமையாக கண்டித்த நீதிபதிகள், "நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் மீறிவிட்டு, தற்போது மன்னிப்பு கேட்பதை எப்படி ஏற்க முடியும்? ”என நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். தொடர்ந்து பதாஞ்சலி நிறுவனம் சார்பில் மீண்டும் மன்னிப்பு கோரி பிராமண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நாங்கள் குருடர்கள் அல்ல, இந்த வழக்கில் தாராளமாக இருக்க விரும்பவில்லை என்றும் கருத்து தெரிவித்தனர். மேலும், பிரமாண பத்திரம் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படுவதற்கு முன்பு பிரமாணப் பத்திரங்கள் பொதுவெளியில் வெளியிட்டதற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர்.

தொடர்ந்து சட்டத்தை மீறியதற்காக பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என, உத்தரகாண்ட் பாஜக அரசுக்கும், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் பதிலில் திருப்தி இல்லை என்றும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories