இந்தியா

விவசாயிகள் மீது ட்ரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டு வீச்சு : இரவு முழுவதும் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்!

டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள் மீது ட்ரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் மீது ட்ரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டு வீச்சு : இரவு முழுவதும் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

இதற்காக, பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லிக்கு வாகனங்களில் பேரணியாக புறப்பட்டனர். விவசாயிகளின் பேரணி டெல்லி செல்வதை தடுக்க டெல்லி எல்லைப் பகுதிகளான சிங்கு, திக்ரி, காசிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் பாதுகாப்பு படையினர் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி எல்லைகளில் கன்டெய்னர்கள், போலீஸ் வாகனங்கள், ராட்சத கான்கிரீட் சுவர்கள் வைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டு சுற்றிலும் முள்வேலிகள் போடப்பட்டுள்ளன.

விவசாயிகளின் வாகன டயர்களை பழுதுப்படுத்தும் வகையில் தரையில் ராட்சத ஆணிகள் அடித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், விவசாயிகளின் வாகனங்களை எதிர்த்துச் சென்று டயர்களை குத்திக் கிழித்து விட்டு திரும்பும் எந்திரங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இப்படி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை ஒன்றிய பா.ஜக அரசு மேற்கொண்டு இருந்தாலும் தடுப்புகளை தகர்த்தெறிந்து விவசாயிகள் முன்னேறி வருகிறார்கள். இதையடுத்த முன்னேறி வரும் விவசாயிகள் மீது நேற்று இரவு முழுவதும் கண்ணீர் புகை குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதேபோல் ட்ரோன்கள் மூலம் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை போலிஸார் வீசி கொடூரமான முறையில் நடந்து கொண்டுள்ளனர். அதேபோல் காலாவதியான குண்டுகளை பயன்படுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு கண் எரிச்சல், நெஞ்சுவலி போன்றவை ஏற்பட்டுள்ளது. காயமடைந்த பலருக்கு சம்பு எல்லையில் மருத்து முகாம்கள் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் போராட்டத்தை முன்னிட்டு தடைகளை உடைத்து டெல்லிக்குள் நுழைவது குறித்து விவசாயிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக விவசாய சங்க தலைவர்கள் இன்று சம்பு எல்லைக்கு செல்ல இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories