இந்தியா

”மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்” : திமுக இளைஞரணி மாநாட்டிற்கு அகில இந்திய தலைவர்கள் வாழ்த்து!

சேலத்தில் தி.மு.க இளைரணி மாநாடு நடைபெற்று வரும் நிலையில் அகில இந்திய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

”மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்” :  திமுக இளைஞரணி மாநாட்டிற்கு அகில இந்திய தலைவர்கள் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டு திடல் முன்பு மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் கழக கொடியை ஏற்றிவைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார் கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி. பின்னர் மாநாட்டு திடலை மாணவர் அணி செயலாளர் எழிலரசன் திறந்து வைத்தார்.

இதையடுத்து இம்மாநாட்டில் நீட் தேர்வு ரத்து முதல் மாநில சுயாட்சி வரை 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பிறகு பல்வேறு தலைப்புகளில் அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் உரையாற்றி வருகிறார்கள்.இந்நிலையில் தி.மு.க இளைஞரணி மாநாட்டிற்கு சோனியா காந்தி, சரத்பவார், நவீன் பட்நாயக், பினராயி விஜயன் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

சோனியா காந்தி (காங்கிரஸ்):

"திமுக இளைஞரணி மாநாட்டில் 'மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்' என்ற தலைப்பில் விவாதம் நடைபெறும் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.உங்கள் உறுதியும் அர்ப்பணிப்பும் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் என்று நான் நம்புகிறேன்."

சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்):

"திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாடு நடைபெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இம்மாநாட்டின் கருப்பொருள் 'மாநில உரிமைகளை மீட்டெடுப்பது' கூட்டாட்சி மற்றும் மத்திய-மாநில உறவுகளின் முக்கியத்துவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இம்மாநாடு இளைஞர்களிடையே சுவாரசியமான உரையாடல்களுக்கும் கருத்துப் பரிமாற்றங்களுக்கும் ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்."

”மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்” :  திமுக இளைஞரணி மாநாட்டிற்கு அகில இந்திய தலைவர்கள் வாழ்த்து!
”மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்” :  திமுக இளைஞரணி மாநாட்டிற்கு அகில இந்திய தலைவர்கள் வாழ்த்து!

ஒடிசா முதலமைச்சர் நவின்பட்நாயக்:

"இந்தியாவில் மாநில உரிமைகள் குறித்து திமுகவின் இளைஞரணியினர் விவாதிக்க மாநாட்டை நடத்துகிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாநாடு நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களால் எதிர்பார்க்கப்படும் ஆவி மற்றும் மதிப்புகளுக்கு மேலும் வலு சேர்க்கும்."

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்:

"திமுக இளைஞரணியின் 2வது மாநாடு 'மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலங்களுக்கும், யூனியனுக்கும் அதிகாரம் அளிக்கக்கூடிய முக்கியமான அரசியல் பொறுப்பை திமுக இளைஞரணி தனது மாநாட்டின் மூலம் மேற்கொள்கிறது. தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்கள் மாநில உரிமைகள் மற்றும் அதிகாரங்களுக்காக எழுந்து நிற்க இது உதவும்."

banner

Related Stories

Related Stories