இந்தியா

ஆன்லைன் விளையாட்டின் பாஸ்வேர்டை பகிராத மாணவர் : ஆத்திரத்தை கொலை செய்து சடலத்தை எரித்த நண்பர்கள் !

ஆன்லைன் விளையாட்டின் பாஸ்வேர்டை பகிராத மாணவரை அவரின் நண்பர்களே கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் விளையாட்டின் பாஸ்வேர்டை பகிராத மாணவர் : ஆத்திரத்தை கொலை செய்து சடலத்தை எரித்த நண்பர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பாப்பை தாஸ் . இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் ஆன்லைனில் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதற்காக விளையாட்டுக்கு பணம் செலுத்தி பிரத்யேக பாஸ்வேர்ட் ஒன்றையும் பெற்றுள்ளார்.

இது குறித்து பாப்பை தாஸ் தனது நண்பர்களிடமும் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரின் நண்பர்களும் அந்த பாஸ்வேர்டை தங்களுக்கும் கொடுக்குமாறு கூறியுள்ளனர். ஆனால், அதற்க்கு பாப்பை தாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவருக்கும் அவரின் நண்பர்களுக்கும் இது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் அடிதடியாக மாறிய நிலையில், அவரின் நண்பர்கள் தாக்கியதில் பாப்பை தாஸை அடித்து கொலைசெய்துள்ளனர்.

ஆன்லைன் விளையாட்டின் பாஸ்வேர்டை பகிராத மாணவர் : ஆத்திரத்தை கொலை செய்து சடலத்தை எரித்த நண்பர்கள் !

பின்னர் பெட்ரோல் கொண்டு பாப்பை தாஸின் உடலை எரிக்க முயன்றிருக்கின்றனர். பின்னர், பாதி எரிந்த உடலை அவர்கள் அங்கிருந்த கால்வாயில் வீசிவிட்டு சென்றுள்ளனர். மகன் காணாமல் போனது குறித்து பாப்பை தாஸின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணை நடத்திவந்தனர்.

அப்போது, பாப்பை தாஸின் சடலத்தில் இருந்த டாட்டுவை வைத்து அவரை அடையாளம் கண்ட போலிஸார், பின்னர் நடத்திய விசாரணையில் அவரின் நண்பர்களே அவரை கொலை செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரின் நண்பர்களை போலிஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories