இந்தியா

”RSS,BJP-யை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்" : காங்கிரஸ் கட்சியின் 139ம் ஆண்டு விழாவில் ராகுல் பேச்சு!

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

”RSS,BJP-யை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்" : காங்கிரஸ் கட்சியின் 139ம் ஆண்டு விழாவில் ராகுல் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காங்கிரஸ் கட்சியின் 139ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, "ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒன்றாக இணைந்து நாடாளுமன்றத் தேர்தலிலும், மகாராஷ்டிரா தேர்தலிலும் வெற்றி பெறும்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வழிகாட்டுதல் படி இந்தியாவைச் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திற்குக் கொண்டு செல்கிறது ஒன்றிய பா.ஜ.க அரச. நாட்டின் மக்கள் தொகையில் 50% ஓபிசி, 15% தலித்துகள், 12% பழங்குடியினர் உள்ளனர். ஆனால் இவர்களுக்கு எந்த துறையிலும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories