இந்தியா

நண்பர் முகம், குரலோடு வந்த Video Call : AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணமோசடி- சிக்கிய குஜராத் கும்பல்!

AI Deep Fake தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கேரளாவில் பணமோசடி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர் முகம், குரலோடு வந்த Video Call : AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணமோசடி- சிக்கிய குஜராத் கும்பல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமீப சில ஆண்டுகளில் Artificial Inteligence தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்தி வாசிப்பாளரை உருவாக்கி, ஒடிசா செய்தி தொலைக்காட்சி ஒன்று சாதனை படைத்தது.

அதோடு ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற "காவலா.." பாடலுக்கு காஜல், சிம்ரன் உள்ளிட்ட நடிகைகள் நடனமாடுவது போல் AI-ஐ பயன்படுத்தி வீடியோக்களும் வெளியானது. இதனை ஒரு தரப்பு ரசிகர்கள் ஆச்சயர்த்துடன் கண்டு ரசித்தாலும், மற்ற சிலர் அதற்கு எதிராகக் கருத்து தெரிவித்தனர்.

கடந்த வாரம் நடிகை ராஷ்மிகாவின் AI தொழில்நுட்ப வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் வேறு ஒரு பெண்ணின் முகத்தில் ராஷ்மிகாவின் முகத்தை பொருத்தி அவர் பிகினி ஆடையில் இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போலி வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்தது.

நண்பர் முகம், குரலோடு வந்த Video Call : AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணமோசடி- சிக்கிய குஜராத் கும்பல்!

இந்த நிலையில், இத்தகைய AI Deep Fake தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கேரளாவில் பணமோசடி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் கேரளத்தில் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு வீடியோ கால் ஒன்று வந்துள்ளது. அதில் அவருடன் வேலைசெய்யும் வேணுகுமார் என்பவரின் முகம் தெரிந்த நிலையில், தனக்கு ரூ.40 ஆயிரம் உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும் என்று அந்த நபர் கூறியுள்ளார்.

நண்பரின் முகம், மற்றும் குரல் ஒன்றுபோல இருந்ததால் ராதாகிருஷ்ணன் பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால், அதன்பின்னர் மீண்டும் பணம் அனுப்புமாறு வீடியோ கால் வர சந்தேகமடைந்து தனது நண்பரான வேணுகுமாரின் எண்ணுக்கு அழைத்து விவரம் கேட்டுள்ளார். அப்போதுதான் வேணுகுமாரின் முகம், குரலை வைத்து மோசடி நடந்த உண்மை அவருக்கு தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இது குறித்து காவல் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார். இது குறித்து 4 மாதமாக விசாரணை நடத்திய போலிஸார் தற்போது இந்த செயலில் ஈடுபட்ட குஜராத்தைச் சேர்ந்த ஷேக் முர்துஷாமியா என்பவரை கைது செய்தனர். மேலும் கெளசல் ஷா என்பவரை தேடி வருகின்றனர். இந்த கும்பல் இதேபோல AI Deep Fake தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலரிடம் மோசடி செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories