இந்தியா

BMW கார் கண்ணாடியை உடைத்து ரூ.14 லட்சம் திருடிச் சென்ற மர்ம நபர் : கர்நாடகாவில் பகீர்!

கர்நாடகாவில் BMW கார் கண்ணாடியை உடைத்து ரூ.14 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BMW கார் கண்ணாடியை உடைத்து ரூ.14 லட்சம் திருடிச் சென்ற மர்ம நபர் : கர்நாடகாவில் பகீர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த BMW கார் கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் ரூ.14 லட்சத்தைக் கொள்ளையடித்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், BMW கார் அருகே முகமூடி அணிந்த ஒருவர் நின்று கொண்டி இருக்கிறோர். அதேபோல் இருசக்கர வாகனத்தில் ஒருவர் உள்ளார். அப்போது நின்றுகொண்டிருந்த நபர் திடீரென கார் கண்ணாடியை உடைத்து அதன் வழியாக உள்ளே சென்று இரண்டு பைகளை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறார்.

பிறகு அங்குத் தயாராக நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி முகமூடி கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். மேலும் கொள்ளையர்கள் எடுத்து என்ற பையில் ரூ.14 லட்சம் இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories