இந்தியா

5 மாநில சட்டமன்ற தேர்தல் : ராஜஸ்தானில் மட்டும் வாக்குப்பதிவு தேதி திடீர் மாற்றம்.. காரணம் என்ன ?

ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் 25-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

5 மாநில சட்டமன்ற தேர்தல் : ராஜஸ்தானில் மட்டும் வாக்குப்பதிவு தேதி திடீர் மாற்றம்.. காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியாவில் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு ஆட்சி நிறைவடையவுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் மேற்கண்ட 5 மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

5 மாநில சட்டமன்ற தேர்தல் : ராஜஸ்தானில் மட்டும் வாக்குப்பதிவு தேதி திடீர் மாற்றம்.. காரணம் என்ன ?

இதைத்தொடர்ந்து அந்த 5 மாநிலங்களிலும், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் தங்களை தேர்தலுக்கு தயார் படுத்தி வந்துகொண்டிருக்கிறது. சில மாநிலங்களில் காங்கிரஸ் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக மகளிருக்கு தொகை, கேஸ் விலை குறைப்பு, மகளிர் இலவச பயணம் உள்ளிட்ட பல திட்டங்களை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது.

5 மாநில சட்டமன்ற தேர்தல் : ராஜஸ்தானில் மட்டும் வாக்குப்பதிவு தேதி திடீர் மாற்றம்.. காரணம் என்ன ?

தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. அதன்படி

1. மிசோரம் - நவம்பர் 07.

2. மத்திய பிரதேசம் - நவம்பர் 17

3. தெலங்கானா - நவம்பர் 30

4. ராஜஸ்தான் - நவம்பர் 23

5. சத்திஸ்கர் - முதற்கட்ட வாக்குப்பதிவு : நவம்பர் 07 ம் தேதி ,

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு : நவம்பர் 17 ம் தேதி.

இந்த 5 மாநிலங்களுக்கு டிசம்பர் 03ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்- என்று தெரிவித்திருந்தது.

5 மாநில சட்டமன்ற தேர்தல் : ராஜஸ்தானில் மட்டும் வாக்குப்பதிவு தேதி திடீர் மாற்றம்.. காரணம் என்ன ?

இந்த நிலையில் நவம்பர் 23 அன்று ராஜஸ்தானில் முகூர்த்த நாள் என்பதால், அன்றைய தினம் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்படுவதற்கு பதில் வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள், பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து தேர்தல் தேதியை மாற்றம் செய்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம் அதன்படி, ராஜஸ்தானில் வாக்குப்பதிவு நவம்பர் 23-ம் தேதிக்கு பதில் நவம்பர் 25-ம் தேதி நடைபெறவுள்ளது.

ராஜஸ்தான் :

மனுதாக்கல் ஆரம்பம் - அக். 30

மனுதக்கல் முடிவு - நவ. 6

வேட்புமனு பரிசீலனை - நவ. 7

வேட்புமனு திரும்பப்பெற - நவ. 9

வாக்குப்பதிவு - நவ. 25

வாக்கு எண்ணிக்கை - டிச. 3

banner

Related Stories

Related Stories