இந்தியா

NewsClick பத்திரிகையாளர்கள் வீடுகளில் ரெய்டு.. மடிக்கணினி செல்போன் பறிமுதல்: ஊடகங்களை நசுக்கும் பாஜக!

நியூஸ்க்ளிக் இணையதளத்துடன் தொடர்புடைய பல பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களின் வீடுகளில் ரெய்டு நடந்துள்ளதற்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.

NewsClick பத்திரிகையாளர்கள் வீடுகளில் ரெய்டு.. மடிக்கணினி செல்போன் பறிமுதல்:  ஊடகங்களை நசுக்கும் பாஜக!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியில் தலைமை இடமாகக் கொண்டு NewsClick என்ற இணைய தளம் செயல்பட்டு வருகிறது. இந்த இணைய தளத்தில் பா.ஜ.க அரசின் மக்கள் விரோத திட்டங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி வருகிறது. அதேபோல் தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கட்சிகளை உடைத்து ஆட்சியை பிடிக்கும் பா.ஜ.கவின் தந்திர வேலைகளையும் இந்த இணையதளத்தில் செய்தியாகவும், கட்டுரைகளாகவும் வெளிவந்துள்ளது.

இப்படி தொடர்ந்து பா.ஜ.க அரசின் முகத்தை கிழித்தெறிந்து வந்ததால் கடுப்பான ஒன்றிய பா.ஜ.க அரசு அமலாக்கத்துறையை ஏவியது. 2021ம் ஆண்டு NewsClick அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். பின்னர் வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்கி முறைகேடு செய்ததாகவும் குற்றம்சாட்டினர்.

பின்னர் இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம், NewsClick மற்றும் அதன் உரிமையாளர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டது. இதையடுத்து அண்மையில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர், சீனாவிலிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு NewsClick பா.ஜ.க அரசுக்கு எதிராகச் செய்திகளை வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

இதையடுத்து தொடர்ச்சியாக பா.ஜ.கவினர் NewsClick இணையதளத்திற்கு எதிராகவே கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை NewsClick இணைய தளத்திற்குத் தொடர்புடைய பத்திரிக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வீடுகளில் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு திடீரென ஆய்வு செய்துள்ளது. கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதோடு பத்திரிக்கையாளர்களின் மடிக்கணினி, செல்போன்கள் ஆகியவற்றை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். UAPA வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி போலிஸாரின் இந்த ரெய்டுக்கு சக பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

மூத்த பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய்,"ஜனநாயகத்தில் பத்திரிகையாளர்கள் எப்போது அரசின் முதல் எதிரிகளாக மாறினார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்

"டெல்லியில் நடைபெறும் ரெய்டுகளின் மூலம் ஊடகங்களின் குரல்வளையை ஒடுக்க மோடி நினைக்கிறார். இது முழுக்க முழுக்க சட்ட விரோதமானது ஜனநாயகத்திற்கு எதிரானது. மோடி அரசுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக அமையும்." கண்டனம் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories