இந்தியா

நெல்லை TO சென்னை.. ஒரே நாளில் 9 வந்தே பாரத் இரயில்கள் தொடக்கம்.. எந்தெந்த வழித்தடங்களில் இயக்கம் ?

சென்னை-நெல்லை உட்பட நாடு முழுவதும் 9 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது.

நெல்லை TO சென்னை.. ஒரே நாளில் 9 வந்தே பாரத் இரயில்கள் தொடக்கம்.. எந்தெந்த வழித்தடங்களில் இயக்கம் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியாவில் இரயில் சேவையை மேம்படுத்தும் வகையிலும் 75 நகரங்களை இணைக்கும் படி வந்தே பாரத் விரைவு இரயில் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் வந்தே பாரத் இரயில் கடந்த 2019-ம் ஆண்டு டெல்லி - வாரணாசி இடையே தொடங்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நெல்லை TO சென்னை.. ஒரே நாளில் 9 வந்தே பாரத் இரயில்கள் தொடக்கம்.. எந்தெந்த வழித்தடங்களில் இயக்கம் ?
HEMANT JOSHI

இதைத்தொடர்ந்து பல்வேறு நகரங்களுக்கு வந்தே பாரத் இரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் முதல் வந்தே பாரத் இரயில் சேவை சென்னை - மைசூரு இடையே கடந்த ஆண்டு நவம்பர் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் சென்னை - கோவை இடையே வந்தே பாரத் இரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் தற்போது சென்னை - நெல்லை இடையே இந்த இரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதனோடு சேர்ந்து இன்று நாடு முழுவதும் மொத்தம் முக்கிய நகரங்களில் 9 வழித்தடங்களில் இந்த இரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி காணொளி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை - நெல்லை வரை இயக்கப்படும் இந்த இரயில் வெறும் 8 மணி நேரத்தில் சென்று விடும். இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், வரும் அக்.2-ம் தேதி வரை முன்பதிவு நிரம்பியுள்ளது.

நெல்லை TO சென்னை.. ஒரே நாளில் 9 வந்தே பாரத் இரயில்கள் தொடக்கம்.. எந்தெந்த வழித்தடங்களில் இயக்கம் ?

9 வழித்தடங்கள் என்னென்ன ?

1. சென்னை - நெல்லை,

2. விஜயவாடா - சென்னை,

3. உதய்பூர்- ஜெய்ப்பூர்,

4. ஹைதராபாத் - பெங்களூரு,

5. பாட்னா - ஹவுரா,

6. ராஞ்சி - ஹவுரா,

7. காசர்கோடு - திருவனந்தபுரம்,

8. ரூர்கேலா - புவனேஸ்வர் - புரி,

9. ஜாம்நகர் - அகமதாபாத்

banner

Related Stories

Related Stories