இந்தியா

கோட்டா : தொடர்ந்து பலிவாங்கும் நீட்.. தனியார் பயிற்சி மையத்தில் படித்துவந்த 16 மாணவி தற்கொலை !

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டா : தொடர்ந்து பலிவாங்கும் நீட்.. தனியார் பயிற்சி மையத்தில் படித்துவந்த 16 மாணவி தற்கொலை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை ஏராளமான செய்துகொண்டுள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு இடங்களில் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.

நீட் தேர்வு அமலுக்கு வந்ததில் இருந்து , தனியார் பயிற்சி மையங்களில் படித்தால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றிபெற முடியும் என நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தனியார் பயிற்சி மையங்கள் லட்ச கணக்கில் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன. மேலும், அங்கு பயிலும் மாணவர்களுக்கு அதிகப்படியான வேலைப்பளுவால் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

கோட்டா : தொடர்ந்து பலிவாங்கும் நீட்.. தனியார் பயிற்சி மையத்தில் படித்துவந்த 16 மாணவி தற்கொலை !

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரிலும் நூற்றுக்கணக்கான தனியார் தேர்வு பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. இதனால் இது தனியார் தேர்வு பயிற்சி மையங்களின் தலைநகர் என்றே அழைக்கப்படுகிறது. ஆனால் இங்கு கடந்த சில வருடங்களாக நீட் போன்ற தேர்வுகளுக்காக தனியார் பயிற்சி மையங்களில் படித்துவரும் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று அங்கு தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 16 வயது மாணவி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோட்டாவில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.

இந்த மாணவி நேற்று மாலை தனது விடுதி அறையில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அங்கு இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்த நிலையில், அவர்கள் வந்து மனைவியின் சடலத்தை மீட்டு சென்றனர். இந்த ஆண்டு மட்டும் கோட்டாவிலுள்ள தனியார் பயிற்சி மையத்தில் படித்துவரும் 25- மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories