இந்தியா

காதலனுடன் காரில் இருந்த காதலி.. வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை.. இளம்பெண் வீட்டில் நடந்த கொடுமை

இளம்பெண் ஒருவர் தனது அபார்ட்மெண்ட்டில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலனுடன் காரில் இருந்த காதலி.. வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை.. இளம்பெண் வீட்டில் நடந்த கொடுமை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெல்லியைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவியும் இளைஞர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த 7-ம் தேதி காதலனின் கார் ஒன்றில் சந்தித்துள்ளனர். அப்போது இருவரும் கொஞ்சம் நெருக்கமாக இருந்துள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் பார்த்துள்ளார்.

பின்னர் அவர் அதனை தனது மொபைலில் விடியோவாக பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த காதல் ஜோடி காரில் செல்ல வீடியோ எடுத்துவரும் அந்த காரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். காதலன் அந்த இளம்பெண்ணை அவரின் அபார்ட்மென்ட் வாசலில் இறக்கிவிட்டுச் சென்ற நிலையில், பின்னால் வந்தவர் அந்த இளம்பெண்ணை மறித்துள்ளார்.

காதலனுடன் காரில் இருந்த காதலி.. வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை.. இளம்பெண் வீட்டில் நடந்த கொடுமை

பின்னர் தன்னிடம் இருந்த வீடியோவை அந்த பெண்ணிடம் காட்டி, தன்னை காவல்துறை அதிகாரி என நம்பவைத்து தான் சொல்வதை கேட்காவிட்டால் இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். மேலும், அந்த இளம்பெண்ணை அங்கு யாரும் இல்லாத இடத்துக்கு கொண்டுசென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்து அங்கிருந்து சென்றுள்ளார்.

நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் உடனடியாக தனது காதலனிடம் இதுகுறித்து கூறியுள்ளார். அதன் பின்னர் இருவரும் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அப்போது சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ததில், குற்றம்சாட்டப்பட்ட ரவி சோலங்கி என்பவர் இந்த செயலை செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை போலிஸார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories