இந்தியா

காதலிக்க மறுத்த இளம்பெண்.. ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலைசெய்த திருநங்கை.. தெலங்கானாவில் அதிர்ச்சி !

காதலிக்க மறுத்த இளம்பெண்ணை திருநங்கை ஒருவர் கத்தியால் குத்தி கொலைசெய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலிக்க மறுத்த இளம்பெண்.. ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலைசெய்த திருநங்கை.. தெலங்கானாவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தெலங்கானா மாநிலம் மஞ்ச்ரியால் மாவட்டத்தைச் சேர்ந்த சலூரி அஞ்சலி (வயது 21) என்பவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவரொடு பரமேஸ்வரி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். பரமேஸ்வரிக்கு மகேஸ்வரி என்ற திருநங்கை சகோதரி இருக்கும் நிலையில், அவருக்கும் அஞ்சலிக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

திருநங்கை மகேஸ்வரி பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வரும் நிலையில், இவர்கள் மூவரும் இணைந்து ஒரே இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். அந்த தருணத்தில் திருநங்கை மகேஸ்வரிக்கு அஞ்சலி மேல் காதல் ஏற்பட்டுள்ளது.

காதலிக்க மறுத்த இளம்பெண்.. ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலைசெய்த திருநங்கை.. தெலங்கானாவில் அதிர்ச்சி !

இதனால் தன்னை காதலிக்குமாறும் திருமணம் செய்துகொள்ளுமாடும் திருநங்கை மகேஸ்வரி அஞ்சலியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், இதில் சற்றும் விரும்பம் இல்லாத அஞ்சலி திருநங்கை மகேஸ்வரியின் கோரிக்கையை தொடர்ந்து புறம்தள்ளி வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை அன்று தன்னை காதலிக்குமாறு அஞ்சலி மற்றும் திருநங்கை மகேஸ்வரிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. எப்போதும்போல மகேஸ்வரியின் கோரிக்கையை அஞ்சலி மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த திருநங்கை மகேஸ்வரி அஞ்சலியை கத்தியால் குத்தியுள்ளார்.

காதலிக்க மறுத்த இளம்பெண்.. ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலைசெய்த திருநங்கை.. தெலங்கானாவில் அதிர்ச்சி !

இதில் பலத்த காயமடைந்த அஞ்சலியை அங்கு இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் திருநங்கை மகேஷ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories